மேலும் அறிய

கன்னியாகுமரி: சிசிடிவி உதவியால் பிடிபட்ட 3 திருடர்கள்...நடந்தது என்ன?

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட, போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் மாவட்டம் முழுவதும் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்களை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு அதன் பதிவுகளை வைத்து தொடர் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை பிடித்துள்ளனர்.
 

கன்னியாகுமரி: சிசிடிவி உதவியால் பிடிபட்ட 3 திருடர்கள்...நடந்தது என்ன?
 
கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையர்கள் குறித்த அடையாளங்கள் தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை
மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக வினு, பேச்சிமுத்து, சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி: சிசிடிவி உதவியால் பிடிபட்ட 3 திருடர்கள்...நடந்தது என்ன?
 
கைது செய்யப்பட்ட வினு மீது 7 வழக்குகள் உள்ளது. இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார். பேச்சிமுத்து மீதும் களக்காடு பகுதியில் வழக்குகள் உள்ளது. இவர் சுசீந்திரம் அழகப்பபுரம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார். சந்தோஷ் அப்டா மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேறு ஏதாவது கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூதப்பாண்டி, குழித்துறை பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs SRH LIVE Score: சவாலான இலக்கை நிர்ணயிக்குமா சென்னை? டாஸ் வென்று ஹைதராபாத் பவுலிங்!
CSK vs SRH LIVE Score: சவாலான இலக்கை நிர்ணயிக்குமா சென்னை? டாஸ் வென்று ஹைதராபாத் பவுலிங்!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
Breaking Tamil LIVE: ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சிPremalatha vijayakanth | ”STRONG ROOM மட்டும் போதுமா?தேர்தல் ஆணையம் STRONG-ஆ இருக்கனும்” - பிரேமலதாGukesh meets Stalin | தம்பி குகேஷ்.. வா பா.. சாதித்த இளைஞர் நேரில் வாழ்த்திய முதல்வர்Premalatha Vijayakanth |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs SRH LIVE Score: சவாலான இலக்கை நிர்ணயிக்குமா சென்னை? டாஸ் வென்று ஹைதராபாத் பவுலிங்!
CSK vs SRH LIVE Score: சவாலான இலக்கை நிர்ணயிக்குமா சென்னை? டாஸ் வென்று ஹைதராபாத் பவுலிங்!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
Breaking Tamil LIVE: ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?
அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?
"வரும் 9 ஆம் தேதி விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது" - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தகவல்!
Embed widget