மேலும் அறிய

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!

சிறுமி துண்டு, துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன. அது தவறான செய்திகள். சம்பவ இடத்தில் சிறுமியின் சடலம் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி  கடந்த 10.03.2026 மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர்.


தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!

அதனை தொடர்ந்து மாணவி காணாமல் போனது குறித்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், காவல்துறை உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததது  மறுநாள் காலை (11.03.2026) காலை தெரியவந்தது.  இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக மாணவியின் சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி ஒருவர் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் குளத்தூர் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காக நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மதன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மாணவி காணமல் போனது குறித்து புகார் அளிக்கச் சென்றபோது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், அலட்சியமாகச் செயல்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி துண்டு, துண்டாக வெட்டிக் கொல்லப்படவில்லை என்று மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தவில்லை. உடற்கூராய்வு அறிக்கை, தடய அறிக்கை, விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் வன்கொடுமை குற்றம் நிகழ்ந்ததா என்பது தெரியும். மேலும், சிறுமி துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன. அது தவறான செய்திகள். சம்பவ இடத்தில் சிறுமியின் சடலம் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு குழப்பம், அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்​சம்​பவத்​தில் புகாரை வாங்க போலீ​ஸார் மறுத்​த​தாக எழுந்த புகார் குறித்து அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டு, நெல்லை சரக டிஐஜி​யிடம் அறிக்கை சமர்ப்​பித்​தனர். அதன்​பேரில், விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலைய ஆய்​வாளர் பிர​வீ​னாவை பணி​யிடை நீக்​கம் செய்​து, டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget