மேலும் அறிய

Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?

தூத்துக்குடியில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலருக்கு வெட்டு, காவலர் ஒருவர் காவலரை வெட்டியது என்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில் தூத்துக்குடியில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலருக்கு வெட்டு, காவலர் ஒருவர் காவலரே வெட்டியது என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் ஓடைத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 30). இவர் வடபாகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் சிவன் மகளான காளீஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. காளீசுவரி 6 மாதம் கர்ப்பினியாக உள்ளார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலையில் முத்துக்குமரன் குடிபோதையில் வந்து உள்ளார். முத்துக்குமரன் மற்றும் 2 பேர் தனது மனைவியின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.


Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?

இதனை காளீசுவரியின் உறவினர்களாக தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் கணபதி சுப்பிரமணியன்(48), காவலாளியாக பணியாற்றி வரும் பெரியவிநாயகம்(41) ஆகியோர் சத்தம் போட்டு உள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமரன் மற்றும் 2 பேர் சேர்ந்து கணபதி சுப்பிரமணியன், பெரியவிநாயகம் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.


Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?

இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?

இந்நிலையில் காவலர் மற்றும் பாதுகாவலரை வெட்டிய தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவலர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.


Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?

இந்நிலையில் அதே முடிவைத்தானேந்தல் கிராமம் மேல தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து மகன் சுரேஷ் பாபு (27). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் கடந்த வாரம் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நடந்த ஒரு திருமண வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் இவரது பிரேஸ்லெட் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராஜா (22) என்பவர் தான் திருடி இருப்பார் என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று ராஜாவிடம் சுரேஷ்பாபு ப்ரேஸ்லெட் சம்பந்தமாக கேட்டாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சுரேஷ்பாபு புதுக்கோட்டை காவல்நிலத்தில் புகார் செய்வதற்காக வந்தாராம். அங்கு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசியிடம் புகார் மனுவை கொடுத்துக் கொண்டிருந்தார்.


Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?

அப்போது பின்னால் வந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷ்பாபுவை சரமாரியாக வெட்டினாராம். காவல் நிலையத்திற்குள் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அவரை சுற்றிவளைத்து ராஜாவை கைது செய்தனர். பின்னர் உடனடியாக படுகாயம் அடைந்த சுரேஷ்பாபுவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்... கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்... கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget