மேலும் அறிய

முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.

மதிவாணன் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படித்துள்ளார். அவரது வீட்டின் அருகாமையிலேயே புவனேஸ்வரியின் வீடு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் படித்து உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு. ஒரு தலை காதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குலத்தை சேர்ந்தவர் கண்ணன்- புவனேஸ்வரி (34) தம்பதி. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஹரீஸ் என்ற மகன் உள்ளார். கண்ணன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் புவனேஸ்வரி கரியாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளி அலுவல் வேலை காரணமாக புவனேஸ்வரி முத்துப்பேட்டை சென்றுவிட்டு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புவனேஸ்வரியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்த மதிவாணன் வயது 36 என்பவர் கோபாலசமுத்திரம் விநாயகர் கோயில் அருகே புவனேஸ்வரியின் இரு சக்கர வாகனத்தின் மீது தனது வாகனத்தை மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறி புவனேஸ்வரி கீழே விழுந்துள்ளார். அப்போது மதிவாணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் உடலில் மூன்று முறை குத்தியுள்ளார். அதன் பின்னர் தானும் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட முயன்றுள்ளார்.

முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து மதிவாணனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோல 108 ஆம்புலன்ஸ் மூலமாக புவனேஸ்வரியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் புவனேஸ்வரி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட மதிவாணன் போலீஸ் பாதுகாப்புடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மதிவாணன் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அவரது வீட்டின் அருகாமையிலேயே புவனேஸ்வரியின் வீடு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் படித்து உள்ளனர். அதன் பின்னர் அதிராம்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப் படித்து உள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதன் பின்னர் கல்லூரி படிப்பை முடித்து மதிவாணன் சொந்த ஊரான முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை மேலக்காடு பகுதிக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அதே முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணனுக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு தலை காதல் விவகாரத்தால் இந்த கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
அதே நேரத்தில் இருவரும் சிகிச்சையில் இருப்பதாலும், தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடத்தில் பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget