மேலும் அறிய

முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.

மதிவாணன் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படித்துள்ளார். அவரது வீட்டின் அருகாமையிலேயே புவனேஸ்வரியின் வீடு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் படித்து உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு. ஒரு தலை காதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குலத்தை சேர்ந்தவர் கண்ணன்- புவனேஸ்வரி (34) தம்பதி. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஹரீஸ் என்ற மகன் உள்ளார். கண்ணன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் புவனேஸ்வரி கரியாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளி அலுவல் வேலை காரணமாக புவனேஸ்வரி முத்துப்பேட்டை சென்றுவிட்டு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புவனேஸ்வரியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்த மதிவாணன் வயது 36 என்பவர் கோபாலசமுத்திரம் விநாயகர் கோயில் அருகே புவனேஸ்வரியின் இரு சக்கர வாகனத்தின் மீது தனது வாகனத்தை மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறி புவனேஸ்வரி கீழே விழுந்துள்ளார். அப்போது மதிவாணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் உடலில் மூன்று முறை குத்தியுள்ளார். அதன் பின்னர் தானும் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட முயன்றுள்ளார்.

முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து மதிவாணனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோல 108 ஆம்புலன்ஸ் மூலமாக புவனேஸ்வரியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் புவனேஸ்வரி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட மதிவாணன் போலீஸ் பாதுகாப்புடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மதிவாணன் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அவரது வீட்டின் அருகாமையிலேயே புவனேஸ்வரியின் வீடு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் படித்து உள்ளனர். அதன் பின்னர் அதிராம்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப் படித்து உள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதன் பின்னர் கல்லூரி படிப்பை முடித்து மதிவாணன் சொந்த ஊரான முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை மேலக்காடு பகுதிக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அதே முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணனுக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு தலை காதல் விவகாரத்தால் இந்த கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
அதே நேரத்தில் இருவரும் சிகிச்சையில் இருப்பதாலும், தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடத்தில் பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget