மேலும் அறிய

திருவாரூர் : வன்கொடுமை வழக்கில் தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு..

குடியா, தனது கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை கேட்டால் என் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே கௌஜியா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பெயர் குடியா. இந்த நிலையில் பால்ராஜ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கௌஜியா நகரிலுள்ள தனது இல்லத்தில் கடந்த ஓராண்டு காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பால்ராஜிக்கும் குடியாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனை அடுத்து குடியாவின் பெற்றோர் வந்து இருவரிடம் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பால்ராஜ் மற்றும் குடியாவிற்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பால்ராஜ் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குடியா மயங்கி விழுந்துள்ளார் அருகில் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு குடியாவை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் குடியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தலையில் 14 தையல் போடப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருவாரூர் : வன்கொடுமை வழக்கில் தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு..
இந்த நிலையில் குடியவிடம் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் குடியா தனது கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை கேட்டால் என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் தாலுகா காவலர்களிடம் குடியா புகார் அளித்துள்ளார்.
 
குடியா அளித்த  புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் தலைமை காவலர் பால்ராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களை கொடூரமாக தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் எனவும் காவல்துறை வட்டாரத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் : வன்கொடுமை வழக்கில் தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு..
இந்த நிலையில் தலைமை காவலர் பால்ராஜ் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் மனைவி குடியா, மைத்துனர் பிரபாகரன், மனைவியின் உறவினர்கள் ராதா மற்றும் ராஜா ஆகிய 4 பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் 4 பேர் மீதும் மூன்று பிரிவின்கீழ் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு தரப்புகளிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்ராஜ்  கொரடாச்சேரி காவல் நிலையம் திருவாரூர் மதுவிலக்கு காவல் நிலையம் என பல்வேறு காவல் நிலையங்களில் பால்ராஜ் பணியாற்றி தற்பொழுது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து வரும்  தலைமைக் காவலரே தன்னுடைய மனைவியை தாக்கிய சம்பவம்  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget