மேலும் அறிய

முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம்

சென்னையில் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அறையில் பல்வேறு வசதிகளுடன் சொகுசாக இருந்துள்ளார். மேலும் அறையில் அங்கிருந்த முக்கிய பொருட்களை பார்த்து போலீசாரே அதர்ச்சியடைந்துள்ளனர்.

முத்துப்பேட்டையில் நடந்த நிச்சயதார்த்தம் விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மணப்பெண்ணின் தோழியே திருடியது அம்பலமானது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது ஆரிப்(53) இவரது மகளுக்கு கடந்த 18ந் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து மாலை பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, செயின், ஆரன், வளையல், மோதிரம் ஆகிய 38 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா(25) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் விசாரணையில் எம்சிஏ படித்துள்ளார். இன்னும் திருமண ஆகவில்லை. பட்டதாரியான வினிதாவும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட முத்துப்பேட்டை மணப்பெனுண்டன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளனர். பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.


முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம்

தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18ந் தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார். அப்போது மணப்பெண் நகைகளை கலட்டி வைத்தபோது நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் தோழி மற்றும் உறவினர்களை கவனத்தை திசை திருப்பி அப்போதே நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போன்று ஊர் செல்வதாக கூறி அன்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார். பின்னர் மன்னார்குடிக்கும் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட வினிதா சென்னையில் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அறையில் பல்வேறு வசதிகளுடன் சொகுசாக இருந்துள்ளார். மேலும் அறையில் அங்கிருந்த முக்கிய பொருட்களை பார்த்து போலீசாரே அதர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிலர் தொடர்பு உள்ளதால் அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுகுறித்து பிடிப்பட்ட வினிதாவிடம் போலீசார் தொடர்ச்சியாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.  


முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம்

இந்தநிலையில் தோழி வீட்டிலேயே பட்டதாரி பெண் ஒருவர் திருடிய சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சம்பவம் நடைபெற்று 10 நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற வீட்டில் இருந்து 38 சவரன் தங்க நகைகள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளது மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் சம்பந்தப்பட்ட காவலர்களை  பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இதே போன்று காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்து தர வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" வெளியே போகலாம் வா " மனைவியைக் காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்ற கணவன் ! போலீஸ் அதிரடி விசாரணை
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
சந்தேகத்தால் கொடூரம்! மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் கைது!
சந்தேகத்தால் கொடூரம்! மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Tamilnadu Round Up: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hero Vida VX2: நாட்டின் மலிவான ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டர் - 70KM டாப் ஸ்பீட், டிஜிட்டல் அம்சங்கள் - முழு விவரம்
நாட்டின் மலிவான ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டர் - 70KM டாப் ஸ்பீட், டிஜிட்டல் அம்சங்கள் - முழு விவரம்
Udhayanidhi Vs Congress : முதுகில் குத்திய காங்.! இனி எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கவே கூடாது.! அடித்து ஆடும் உதயநிதி
முதுகில் குத்திய காங்.! இனி எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கவே கூடாது.! அடித்து ஆடும் உதயநிதி
DMK vs Congress : காங்கிரஸால தான் வெற்றியே பெற்றீங்க.! இனி கடும் விளைவுகளை சந்திப்பீங்க- திமுகவை எச்சரிக்கும் ராஜேஸ்குமார்
காங்கிரஸால தான் வெற்றியே பெற்றீங்க.! இனி கடும் விளைவுகளை சந்திப்பீங்க- திமுகவை எச்சரிக்கும் ராஜேஸ்குமார்
TN Weather Update: 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
TN Minister: பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
Embed widget