மேலும் அறிய

6 போலீசார் சஸ்பென்ட் ஆன விவகாரம்: மது கடத்த காரணமான இருவர் கைது!

ஊரடங்கு காலகட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் மூல காரணமாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே ஊரடங்கு காலகட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விவகாரம்: 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் 2 பேர் மீண்டும் கைது.
 
ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மது பிரியர்கள் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு சென்று அங்கு மது பாட்டில்களை வாங்கி வந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து மது பாட்டில்களை கடத்தி வருபவர்களை கைது செய்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தின் மூலமாக தங்களது உடல் முழுவதும் மதுபான பாட்டில்களை கட்டிக்கொண்டு கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி என்னுமிடத்தில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மறைத்து காவல்துறையினர் சோதனை செய்த பொழுது, இரண்டு இளைஞர்களின் உடல் முழுவதும் வெளிமாநில மது பாட்டில்களை கட்டி கொண்டு கடத்தி வந்தது தெரியவந்தது.
 
அதனையடுத்து இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் மீது எந்தவித வழக்கும் போடாமல் காவல்துறையினர் அவர்களை விடுவித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் இரண்டு நபர்களிடம் சாலையில் நின்று விசாரணை செய்ததை அந்தப் பகுதியில் இருந்த சில நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி சீனிவாசனுக்கு புகார் சென்றதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் சம்பவம் உண்மை எனவும் அதே நேரத்தில் வழக்குத் தொடுக்காமல் இருவரையும் காவல் துறையினர் விடுவித்தது உண்மை என தெரிய வந்ததையடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சீனிவாசன் தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ் குமாருக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.
 
அதனடிப்படையில் காவல்துறையினரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமை காவலர்கள் சண்முகநாதன், ராஜா, முதல் நிலை காவலர்கள் பாரதிராஜன், விமலா, ஆகிய ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த நடவடிக்கை காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் ஆறு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதற்குப்பிறகு கடந்த மாதம் நான்காம் தேதி மதுபாட்டில்களை கடத்தி வந்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மற்றும் கேசவன் ஆகிய இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget