மேலும் அறிய

திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பேருந்துகளும், கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சின்னகாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி மகன் பூங்காவனம் வயது (31). இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் சென்னை அரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 4 லட்சத்து10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு தொகை வழங்காததால் பூங்காவனம் மேல்முறையிடு செய்தார். அதனை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே வழங்க உத்தரவிட்ட தொகையுடன், வட்டியும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.

 


திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

 

 

ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்காததால், கோர்ட் ஊழியர்கள்  திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் மார்கமாக செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலம் வயது (43) என்பவர், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் சோனாகுட்டை பகுதியில் இருந்து சாத்தனூர் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். சாத்தனூர் அருகே வந்தபோது பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடாஜலம் உட்பட 20 நபர்கள்  படுகாயம் அடைந்தனர்.இதில் பாதிக்கப்பட்ட வெங்கடாஜலம் இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையாக 69 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

 


திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

 

ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு வழங்காததால், இதுகுறித்து வெங்கடாஜலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை மற்றும் இதுநாள் வரை வட்டியுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு 1.11 லட்சம் வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.ஆனால், உரிய இழப்பீடு தொகை வழங்காததால்  கோர்ட் ஊழியர்கள் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் அடுத்தடுத்து ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget