மேலும் அறிய

திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பேருந்துகளும், கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சின்னகாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி மகன் பூங்காவனம் வயது (31). இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் சென்னை அரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 4 லட்சத்து10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு தொகை வழங்காததால் பூங்காவனம் மேல்முறையிடு செய்தார். அதனை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே வழங்க உத்தரவிட்ட தொகையுடன், வட்டியும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.

 


திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

 

 

ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்காததால், கோர்ட் ஊழியர்கள்  திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் மார்கமாக செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலம் வயது (43) என்பவர், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் சோனாகுட்டை பகுதியில் இருந்து சாத்தனூர் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். சாத்தனூர் அருகே வந்தபோது பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடாஜலம் உட்பட 20 நபர்கள்  படுகாயம் அடைந்தனர்.இதில் பாதிக்கப்பட்ட வெங்கடாஜலம் இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையாக 69 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

 


திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

 

ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு வழங்காததால், இதுகுறித்து வெங்கடாஜலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை மற்றும் இதுநாள் வரை வட்டியுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு 1.11 லட்சம் வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.ஆனால், உரிய இழப்பீடு தொகை வழங்காததால்  கோர்ட் ஊழியர்கள் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் அடுத்தடுத்து ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கிச் சூடு அதிரடி! 'தீரன்' பாணி கண்டெய்னர் லாரி சிக்கியது எப்படி? பகீர் பின்னணி!
ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கிச் சூடு அதிரடி! 'தீரன்' பாணி கண்டெய்னர் லாரி சிக்கியது எப்படி? பகீர் பின்னணி!
ஆம்னி பேருந்தில் அத்துமீறல்.. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. லிஃப்ட் கேட்டதால் விபரீதம்!
ஆம்னி பேருந்தில் அத்துமீறல்.. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. லிஃப்ட் கேட்டதால் விபரீதம்!
"அவனோட பேசாதன்னு சொன்னேனா இல்லையா ? - 29 வயது இளைஞரால் 50 வயது பெண் சந்தித்த கொடூர முடிவு
குடும்ப பிரச்னையில் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு
குடும்ப பிரச்னையில் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vanni Arasu:
Vanni Arasu: "முதலமைச்சர் விஜய் கொடுத்த துணிச்சல்லதான் நாங்க செயல்படுகிறோம்.." நெகிழ்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு
Vijay PM Candidate : ’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
CM Vijay: மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
"இனி பொறுக்க முடியாது!" தனிப் பெரும்பான்மைக்கு போட்ட திட்டம்... சீக்ரெட் மூவ் நகர்த்தும் விஜய்!
TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
Lexus ES 350h Hybrid Sedan: போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
Trump Slams Iran: ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
Embed widget