மேலும் அறிய

திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பேருந்துகளும், கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சின்னகாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி மகன் பூங்காவனம் வயது (31). இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் சென்னை அரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 4 லட்சத்து10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு தொகை வழங்காததால் பூங்காவனம் மேல்முறையிடு செய்தார். அதனை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே வழங்க உத்தரவிட்ட தொகையுடன், வட்டியும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.

 


திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

 

 

ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்காததால், கோர்ட் ஊழியர்கள்  திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் மார்கமாக செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலம் வயது (43) என்பவர், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் சோனாகுட்டை பகுதியில் இருந்து சாத்தனூர் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். சாத்தனூர் அருகே வந்தபோது பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடாஜலம் உட்பட 20 நபர்கள்  படுகாயம் அடைந்தனர்.இதில் பாதிக்கப்பட்ட வெங்கடாஜலம் இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையாக 69 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

 


திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

 

ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு வழங்காததால், இதுகுறித்து வெங்கடாஜலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை மற்றும் இதுநாள் வரை வட்டியுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு 1.11 லட்சம் வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.ஆனால், உரிய இழப்பீடு தொகை வழங்காததால்  கோர்ட் ஊழியர்கள் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் அடுத்தடுத்து ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
"விஜய் அரசியலுக்கு வருவது பெரிய மாற்றம்" - ராம்தாஸ் அத்வாலே அதிரடி கருத்து...
Embed widget