மேலும் அறிய

Crime: திருவண்ணாமலை அருகே 9 மாதங்களுக்குப் பிறகு வங்கி ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

வாணப்புரம் அருகே 9 மாதங்களுக்குப் பிறகு வங்கி ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த எடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி வயது (52). இவருக்கு திருமணமாகி மீனாட்சி வயது (50) என்ற மனைவியும் விக்னேஷ் வயது (27), அபிராமி வயது (23), ஸ்ரீதர் வயது (16) ஆகிய 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். வீராசாமி தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு சம்பவத்தில் வீராசாமியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாார். இதனால் அவர் வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி தனது விவசாய நிலத்திற்கு சென்ற வீராசாமி பல மணி நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.

 


Crime: திருவண்ணாமலை அருகே 9 மாதங்களுக்குப் பிறகு வங்கி ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபோது ஆழமான பகுதியில் வீராசாமியின் உடல் இருந்தது. இதுகுறித்து உடனடியாக வாணாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் வீராசாமியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது வீராசாமியின் தலை, முகம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டு காயம் இருந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீராசாமியின் மனைவி மீனாட்சி வாணாபுரம் காவல்நிலையத்தில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி புகார் மனு அளித்துள்ளார். 

 


Crime: திருவண்ணாமலை அருகே 9 மாதங்களுக்குப் பிறகு வங்கி ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

 

இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டறிவதற்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்காததால் காவல்துறையினர் குற்றவாளியை பிடிப்பதற்கு சற்று குழப்பம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து செல்போன் எண்களை வைத்து காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க முடிவு செய்து சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியோடு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி வயது (58) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுப்பிரமணியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 


Crime: திருவண்ணாமலை அருகே 9 மாதங்களுக்குப் பிறகு வங்கி ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

முன்விரோதம் காரணமாக கொலை செய்த 2 பேர் கைது 

அப்போது அவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் வீராசாமியின் விவசாய நிலம் இருப்பதாகவும், தங்கள் நிலத்திலிருந்து பாதை இல்லாததால் பாதை கேட்டு பலமுறை இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாதை விடாமல் இருக்கும் வீராசாமியை கொலை செய்ய சுப்பிரமணி திட்டம் தீட்டினார். இதற்கு ஆண்டியார் பாளையத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் விஷ்ணு வயது (29) மற்றும் கமல், ஜோயல் ஆகிய 3 நபர்களின் உதவியோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி வீராசாமி தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் படுத்திருந்தபோது அவரை உருட்டு கட்டையால் பலமாக அடித்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தார். உடனடியாக சுப்பிரமணி, விஷ்ணு ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கமல், ஜோயல் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று, எவ்வாறு கொலை செய்தோம் என்று விஷ்ணு செய்து காட்டினார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget