மேலும் அறிய

திருவண்ணாமலையில் கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர் மற்றும் சிறுவன் கைது - நகை பணம் பறிமுதல்

’’18 வயது பூர்த்தியடையாத சிறுவன் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பு’’

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, நாளால்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மணிநாவிதர் மகன் வெற்றிவேல் (21) சாத்தனூரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகின்றார். காலை சுமார் 8.30 மணிக்கு பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு செல்லும் பொழுது தானிப்பாடி மற்றும்  தண்டராம்பட்டு சாலையில் உள்ள நாளால்பள்ளம் பேருந்து நிலையத்தில்  பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது பதிவெண் இல்லாத கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் வெற்றிவேல் கழுத்தில் கத்தியை வைத்து, அவரிடம் இருந்து 5000 ரூபாயை கொள்ளையடித்து  சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அதனை தட்டி கேட்க சென்ற போது அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வெற்றி வேல் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

திருவண்ணாமலையில் கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர் மற்றும் சிறுவன் கைது - நகை பணம் பறிமுதல்

அதனை தொடர்ந்து அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவுப்படி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை அவர்களின் தலைமையில், தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் தனலட்சுமி, மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தண்டராம்பட்டில் இருந்து தானிப்பாடி செல்லும்  சாலையில் உள்ள துரிஞ்சிமரம் பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதி வழியாக கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தவர்களை காவல்துறையினர் மடக்கி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முன்னுக்கு பின்னாக வாலிபர்கள் பதில் அளித்துள்ளனர். அதன் பிறகு இரண்டு  வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் வெற்றி வேலிடம் கத்தியை காட்டி பணம் பறித்த நபர்களான  கோட்டீஸ்வரன் (24) 8 ஆவது தெரு வீரணூர் கிராமம், சின்னியம்பேட்டை அஞ்சல், தண்டராம்பட்டு தாலுக்கா என்றும்,  மற்றுமொருவர் 18 வயது பூர்த்தியடையாத இளஞ்சீரார் என தெரியவந்தது. 


திருவண்ணாமலையில் கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர் மற்றும் சிறுவன் கைது - நகை பணம் பறிமுதல்

மேலும் அவர்கள் இதற்கு  முன்பு  தண்டராம்பட்டு மற்றும் தானிப்பாடி பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்து. கோடீஸ்வரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். அதனைத தொடர்ந்து மற்றொருவர் 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 5,000 பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஈரோடு தேர்தல்: பெரியார் மண்ணில் வெற்றி: எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி-  முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு தேர்தல்: பெரியார் மண்ணில் வெற்றி: எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி- முதல்வர் ஸ்டாலின்
Rahul Gandhi:டெல்லி தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றியில்லை: ராகுல் காந்தி சொன்னது என்ன?
டெல்லி தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றியில்லை: ராகுல் காந்தி சொன்னது என்ன?
Delhi Election Result: ஒரு தொகுதியிலும் வெற்றியில்லை! வீணாகியதா ராகுல் காந்தியின் முயற்சிகள்?
Delhi Election Result: ஒரு தொகுதியிலும் வெற்றியில்லை! வீணாகியதா ராகுல் காந்தியின் முயற்சிகள்?
Valentines Day:
Valentines Day: "காதல் தேசம் முதல் குட்டி வரை" காலத்திற்கும் அழியாத முக்கோண காதல் படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோAravind kejriwal Lost : மண்ணைக் கவ்விய கெஜ்ரிவால்! சாதித்து காட்டிய மோடி! தலைநகரை கைப்பற்றிய பாஜகStory of Parvesh Verma BJP | கெஜ்ரிவாலுக்கு தண்ணி காட்டியவர்.. டெல்லியின் முதல்வராகும் பர்வேஷ் சிங்?Manapparai School Issue | குழந்தைக்கு பாலியல் தொல்லைஅதிரடி காட்டிய போலீஸ் மணப்பாறை பள்ளியில் பகீர்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈரோடு தேர்தல்: பெரியார் மண்ணில் வெற்றி: எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி-  முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு தேர்தல்: பெரியார் மண்ணில் வெற்றி: எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி- முதல்வர் ஸ்டாலின்
Rahul Gandhi:டெல்லி தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றியில்லை: ராகுல் காந்தி சொன்னது என்ன?
டெல்லி தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றியில்லை: ராகுல் காந்தி சொன்னது என்ன?
Delhi Election Result: ஒரு தொகுதியிலும் வெற்றியில்லை! வீணாகியதா ராகுல் காந்தியின் முயற்சிகள்?
Delhi Election Result: ஒரு தொகுதியிலும் வெற்றியில்லை! வீணாகியதா ராகுல் காந்தியின் முயற்சிகள்?
Valentines Day:
Valentines Day: "காதல் தேசம் முதல் குட்டி வரை" காலத்திற்கும் அழியாத முக்கோண காதல் படங்கள்!
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
IND vs ENG: நாளை 2வது ஒருநாள் போட்டி! களமிறங்குவாரா கிங் கோலி? பதில் சொன்ன பயிற்சியாளர்
IND vs ENG: நாளை 2வது ஒருநாள் போட்டி! களமிறங்குவாரா கிங் கோலி? பதில் சொன்ன பயிற்சியாளர்
"என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" பிஸ்கட் வழங்கி கொண்டாடிய புருஷன்
Pakistan PM Shehbaz Sharif: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
Embed widget