திண்டிவனம்: தலைக்கு தேய்க்கும் டை குடித்து பெண் தற்கொலை: காரணம் என்ன?
திண்டிவனம் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ கால்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி வினிதா(23). இவர் செஞ்சியை அடுத்த தொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி சக்திவேல் உடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சக்திவேல் கொத்தனார் வேலைக்காக சென்னைக்கு சென்று அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளார். தினமும் அவரது மனைவி வினிதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை:
இதே போல் நேற்று காலை 8 மணியளவில் சக்திவேல், வினிதாவுடன் வீடியோ காலில் பேசியதாக தெரிகிறது. பின்னர் 2 மணி நேரத்துக்குள் மாம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி தலையில் தேய்க்க பயன்படுத்தும் சூப்பர் வாஸ்மல் எண்ணையை குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மனைவியை பைக்கில் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வினிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் வினிதா உயிரிழந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கும் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திண்டிவனம் அருகே இளம்பெண் தலையில் தேய்க்கும் எண்ணையை குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழிப்புணர்வு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets