மேலும் அறிய

Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

தஞ்சையில் பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோழகிரிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி  வேலையை முடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்து இருந்துள்ளார். தோழகிரிப்பட்டிக்கு முறையான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக காத்திருந்தும் அந்த இளம்பெண்ணுக்கு பேருந்து கிடைக்கவில்லை.

அப்போது, அந்த இளம்பெண்ணுக்கு நன்கு தெரிந்த பக்கத்து ஊரான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கொடியரசன் இரு சக்கர வாகனத்தில் அந்த வழியே வந்துள்ளார். இளம்பெண்ணைப் பார்த்த கொடியரசன் தோழகிரிப்பட்டியில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே கொடியரசன் பழக்கம் என்பதால் அவரை நம்பி அந்த இளம்பெண்ணும் அவரது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.


Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

நகரத்தின் எல்லையை கடந்ததும் தோழகிரிப்பட்டிக்கு செல்லும் வழக்கமான பாதையில் செல்லாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளே சென்ற சாலையில் கொடியரசன் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனால், இளம்பெண்ணுக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உடனே, ஏன் பாதை மாறி செல்கிறாய்? என்று கொடியரசனிடம் கேட்டுள்ளார். ஆனால், கொடியரசன் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை அதிகரித்ததுடன் ஆள் அரவமற்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர், சத்தம் போட்டு தனது நண்பர்களை அழைத்துள்ளார். அங்கே மறைந்திருந்த அவரது நண்பர்களான சுகுமார், சாமிநாதன், கண்ணன் வெளியில் வந்தனர். அவர்களை கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், அவர்கள் நான்கு பேரும் இணைந்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணிடம் நடந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பின்னர், தோழகிரிப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு மிகவும் தாமதமாக சென்ற அந்த இளம்பெண் அழுதுகொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் நடந்த விஷயங்களை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.


Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

பின்னர், அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் நியாயம் கேட்க சென்றபோது கட்டப்பஞ்சாயத்திற்கு வந்த இரண்டு பேர் அந்த இளம்பெண்ணையும், அவரது பெற்றோர்களையும் மிரட்டியுள்ளனர். இதனால், இளம்பெண்ணும் அவரது பெற்றோர்களும் அச்சத்திற்கு ஆளாகினர். இருப்பினும் கடுமையான மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தைரியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்தார்.


Thanjavur: பழகிய நபர் என்பதால் பைக்கில் ஏறிய பெண்! கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

இதையடுத்து, காவல்துறையினர் கொடியரசனையும், அவரது நண்பர்களான சுகுமார், சாமிநாதன், கண்ணன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குருங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, செல்லத்துரை, தமிழரசன் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணை நன்கு தெரிந்த நபர் நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget