மேலும் அறிய

பான் கார்டு செயல் இழந்து விட்டதாக கூறி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.2.63 லட்சம் மோசடி

பான் கார்டு கிரெடிட் கார்டு , அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள். நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சேர்ந்த ஒருவர் தனியார் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டது.

எனவே பான் கார்டு கிரெடிட் கார்டு , அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள். நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய கல்லூரி அதிகாரி, குறிப்பிட்ட எண்ணில் மர்ம நபர் கேட்ட விவரங்களை பதிவிட்டார். தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் கல்லூரி அதிகாரியின் கிரடிட் கார்டில் இருந்து ரூ.2.63 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த நம்பரை தொடர்பு கொண்டும் பலன் இல்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் பட்டுக்கோட்டை மணிபட்டினம் பகுதியை சேர்ந்த 39 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இது தொடர்பாக பலரிடம் சொல்லி வைத்திருந்தார். இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நீங்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள். உங்களுக்கு விசா வாங்கித் தருகிறேன்.

மருத்துவ சான்றிதழும் தயார் செய்து கொடுக்கிறேன் என பேசி இணைப்பை துண்டித்தார். இதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.72 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பல நாட்களாகியும் அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை . விசாவும் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் குறிப்பிட்ட நம்பரை தொடர்பு கொண்டு பயனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

இந்த 2  சம்பவங்கள் குறித்தும் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுவாமிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சப் -இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கடத்தியவர் கைது: தஞ்சை அருகே மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை அருகே காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியில் கள்ளப்பெரம்பூர் சப்இன்ஸ்பெக்டர் செல்வராணி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அதில் இருந்தவர்கள் மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டி தப்பியோடினர். இதில் தஞ்சை மேலவீதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார். மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Manickam Tagore : ‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
Embed widget