மேலும் அறிய

சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது

பாலனுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதியை சேர்ந்த பாலன் (45). இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது, உதயசூரியபுரத்தில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் என்ற கடைகளை நடத்தி வருகிறார்.

பாலன் பா.ஜ., பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்தார்.  கடந்த 2004ம் ஆண்டு ராஜி என்பவரை பாலன் திருமணம் செய்துள்ளார். பாலனுக்கு கபிலன் (20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது

இந்நிலையில், கொண்டிக்குளம், சர்கார் தோப்பு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சரண்யா (38), மதுரை செல்லுாரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமான நிலையில், மதுரையில் வசித்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். அதன்பிறகு பாலனுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

சரண்யாவிற்கு சாமுவேல் (15), சரவணன் (13) என்ற இரண்டு மகன் உள்ளனர். பாலன், சரணவிற்கு, பா.ஜ., மகளிரணியில் பொறுப்பு வாங்கிக் கொடுத்தார். 

இதையடுத்து மதுரையில் ஏற்பட்ட பிரச்சனையால் சரண்யா தனது மகன்களுட்ன், பாலனும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு,  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்திற்கு வந்து  வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு, பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் கடைகளை பூட்டி விட்டு டூ வீலரில் வீட்டிற்கு சென்று விட்டனர்.

சரண்யா கடைத்தெருவில் பால் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது, அவரை மர்மநபர்கள் வழிமறித்து, கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் சரண்யாவின் தலை தனியாக துண்டித்து விழுந்துள்ளது.   உடன் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை பாலனின் முதல் மனைவியின் மகனான மேலுாரை சேர்ந்த கபிலன் (20), அவரது நண்பரான குகன் (20) மற்றும் கொண்டிக்குளம் சர்கார்தோப்பு பகுதியை பார்த்திபன் (20) ஆகிய மூவரும், மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6ல் ஆஜராக முயன்றனர்.

அவர்களை நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மூன்று பேரையும் தங்களின் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். 

முதற்கட்ட விசாரணையில், பாலன் கழுகுபுலிக்காட்டில் சுமார் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் இடம் ஒன்றை, வாங்கி தனது முதல் மனைவி மகனான கபிலன் பெயரில் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து சரண்யாவுக்கு தெரியவர, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

உடனே பாலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கபிலன் அவரது நண்பரான குகன் ஆகிய இருவரையும், பார்த்திபன் வீட்டில் தங்க வைத்து, சரண்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்தது தெரியவந்தது.  தொடர்ந்து பாலனையும் போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai Vintage bus: கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Tata Sierra Finance Plan: டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
Maruti Fronx No.1: காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
Embed widget