மேலும் அறிய

சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது

பாலனுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதியை சேர்ந்த பாலன் (45). இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது, உதயசூரியபுரத்தில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் என்ற கடைகளை நடத்தி வருகிறார்.

பாலன் பா.ஜ., பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்தார்.  கடந்த 2004ம் ஆண்டு ராஜி என்பவரை பாலன் திருமணம் செய்துள்ளார். பாலனுக்கு கபிலன் (20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது

இந்நிலையில், கொண்டிக்குளம், சர்கார் தோப்பு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சரண்யா (38), மதுரை செல்லுாரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமான நிலையில், மதுரையில் வசித்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். அதன்பிறகு பாலனுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

சரண்யாவிற்கு சாமுவேல் (15), சரவணன் (13) என்ற இரண்டு மகன் உள்ளனர். பாலன், சரணவிற்கு, பா.ஜ., மகளிரணியில் பொறுப்பு வாங்கிக் கொடுத்தார். 

இதையடுத்து மதுரையில் ஏற்பட்ட பிரச்சனையால் சரண்யா தனது மகன்களுட்ன், பாலனும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு,  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்திற்கு வந்து  வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு, பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் கடைகளை பூட்டி விட்டு டூ வீலரில் வீட்டிற்கு சென்று விட்டனர்.

சரண்யா கடைத்தெருவில் பால் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது, அவரை மர்மநபர்கள் வழிமறித்து, கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் சரண்யாவின் தலை தனியாக துண்டித்து விழுந்துள்ளது.   உடன் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை பாலனின் முதல் மனைவியின் மகனான மேலுாரை சேர்ந்த கபிலன் (20), அவரது நண்பரான குகன் (20) மற்றும் கொண்டிக்குளம் சர்கார்தோப்பு பகுதியை பார்த்திபன் (20) ஆகிய மூவரும், மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6ல் ஆஜராக முயன்றனர்.

அவர்களை நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மூன்று பேரையும் தங்களின் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். 

முதற்கட்ட விசாரணையில், பாலன் கழுகுபுலிக்காட்டில் சுமார் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் இடம் ஒன்றை, வாங்கி தனது முதல் மனைவி மகனான கபிலன் பெயரில் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து சரண்யாவுக்கு தெரியவர, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

உடனே பாலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கபிலன் அவரது நண்பரான குகன் ஆகிய இருவரையும், பார்த்திபன் வீட்டில் தங்க வைத்து, சரண்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்தது தெரியவந்தது.  தொடர்ந்து பாலனையும் போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
Embed widget