மேலும் அறிய

கருங்கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

’’மனைவியை கருங்கல்லை போட்டு கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு’’

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சள்வயல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பரமணியன் (59), விவசாயியான இவருக்கு ராஜேஸ்வரி (47) என்ற மனைவியும்,இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு கடந்த சிறிது நாட்களாக மனைவியின் மீது சந்தேகம் வந்தது. இதனால் பாலசுப்பரமணியன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறு செய்து, அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி, அருகில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். அவர்களும், பாலசுப்பிரமணியனிடம், மனைவி ராஜேஸ்வரியை அடித்து துன்புறுத்த கூடாது என எடுத்து கூறினார்கள்.

ஆனால் பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியை கொடுமைபடுத்தி அடித்து வந்ததை நிறுத்த வில்லை.  இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில்  இருந்து வந்துள்ளார். இது குறித்து புலம்பி வந்தார். இதை போல் கடந்த, 2017  ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, குடிபோதையில் வந்த பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியிடம்,  தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கி, அடித்து விட்டு, வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.


கருங்கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்த பாலசுப்பரமணியன், வீட்டின் கதவை தட்டிய போது, அவரது மகள் ஜமுனாராணி கதவை திறந்துள்ளார்.  அப்போது, துாங்கி கொண்டிருந்த மனைவி ராஜேஸ்வரியை, மீண்டும் திட்டி, கொடுமைபடுத்தி, தாக்கினார். பின்னர் ராஜேஸ்வரி படுத்துறங்கினார். போதையில், ஆத்திரம் அடங்காத, பாலசுப்பரமணியன், வீட்டில் இருந்த கருங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டு, விட்டு தப்பியோடி விட்டார்.  இதில் ராஜேஸ்வரி துடிதுடித்து இறந்தார்.

தந்தை பாலசுப்பிரமணியன், தாய் ராஜேஸ்வரியுடம் சண்டை போட்டு விட்டு, சத்தம் இல்லாமல் இருந்ததையறிந்த, மகள் ஜமுனாராணி, உள்ளே சென்று பார்த்த போது, ரத்தவெள்ளத்தில் ராஜேஸ்வரி கிடந்தார். பின்னர் அருகிலிருந்தவர்கள், ராஜேஸ்வரியை, அதிராம்பட்டினம் அரசு மருத்தவமனைக்கு துாக்கி சென்றனர். ஆனால் பலமாக அடிபட்டதால், ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்த அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, பாலசுப்பரமணியனை கைது செய்தனர்.  இந்த வழக்கு, தஞ்சாவூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை மகிளா கோர்ட்டின் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மனைவியை கருங்கல்லை போட்டு கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபாரத்தை கட்ட தவறினால், 6 மாதம் கூடுதல் சிறை தண்டனை எனவும் உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து சென்றனர். மனைவியை கொன்ற கணவனுக்க ஆயுள் தண்டனை விதித்ததால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget