மேலும் அறிய

Crime : கல்யாணத்தில் முடிந்த கள்ளக்காதல்..! கொடூர கொலையில் முடிந்த போலி கல்யாணம்.. நகைக்கடை ஊழியர் கைது..!

திருவனந்தபுரத்தில் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணை கொலை செய்த நகைக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அடுத்து அமைந்துள்ளது தம்பாவூர். இங்கு தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விடுதியின் பூட்டப்பட்ட அறையில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காயத்ரி என்பதும், அவருக்கு 24 வயதே ஆகிறது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் விசாரணையில் காயத்ரி உயிரிழந்து கிடந்த அறை பிரவீன் என்பவரது பெயரில் பதிவாகியிருப்பது தெரியவந்தது. மேலும், காயத்ரியும், பிரவீனும் ஒரே நகைக்கடையில் பணியாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


Crime : கல்யாணத்தில் முடிந்த கள்ளக்காதல்..! கொடூர கொலையில் முடிந்த போலி கல்யாணம்.. நகைக்கடை ஊழியர் கைது..!

இதையடுத்து, அறையை எடுத்து தங்கியிருந்த பிரவீனை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரவீனும், காயத்ரியும் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர். நகை விற்பனையாளரான பிரவீனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அப்போது, அங்கு பணிக்கு சேர்ந்த நகைக்கடை வரவேற்பாளர் காயத்ரியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிரவீனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும் காயத்ரி அவரை காதலித்துள்ளார். அப்போது, இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பிரவீனின் மனைவி பார்த்துள்ளார். இதையடுத்து, தனது கணவன் பிரவீனிடம் சண்டையிட்டது மட்டுமின்றி அவர் பணிபுரியும் நகைக்கடை நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளார்.

இதைக்கேட்ட அதிர்ச்சியடைந்த நிர்வாகம் பிரவீனை திருவனந்தபுரத்தில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள அவர்களது கடைக்கு பணியிட மாற்றம் செய்தது. மேலும், காயத்ரியை வேலையை விட்டும் நீக்கியது. இதனால், மனமுடைந்த காயத்ரி பிரவீனை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரை சமாளிப்பதற்காக பிரவீன் திருவனந்தபுரத்தில் இருந்த சர்ச் ஒன்றில் தாலி கட்டியுள்ளார். அதை தனக்கு ஆதாரமாக காயத்ரி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Crime : கல்யாணத்தில் முடிந்த கள்ளக்காதல்..! கொடூர கொலையில் முடிந்த போலி கல்யாணம்.. நகைக்கடை ஊழியர் கைது..!

ஆனால், இந்த திருமணம் பற்றியும், புகைப்படம் பற்றியும் யாருக்கும் தெரியக்கூடாது என்று பிரவீன் கூறியுள்ளார். ஆனால், தனது தோழிகளுக்கு தனது திருமணம் பற்றி தெரிவிக்க விரும்பிய காயத்ரி, பிரவீனுடான தன்னுடைய திருமணத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். இந்த விவகாரம் காயத்ரியின் தோழிகள் மட்டுமின்றி பிரவீனின் கடை நிர்வாகத்திற்கும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தை அறிந்த பிரவீன் திருவனந்தபுரத்தில் தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு காயத்ரியை வரவழைத்துள்ளார். அங்கு அவரிடம் இந்த ஸ்டேட்டஸ் விவகாரம் பற்றி பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த பிரவீன் காயத்ரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது சடலத்தை அந்த அறையிலே போட்டு பூட்டிவிட்டு தப்பியும் ஓடியுள்ளார். பின்னர், அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது, பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவு கொலையில் முடிந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Embed widget