மேலும் அறிய

மனைவி, மாமனாரால் மன உளைச்சல்...கபடி வீரர் தற்கொலை - தென்காசியில் சோகம்

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணிக்காகத் தேர்வாகி விளையாகி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்த பரிமளம் என்பவரது மகன் அருணாச்சலம் (வயது 28). இவர் கபடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் பகவதி (வயது 25) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம்  நடந்துள்ளது. அதோடு அருணாச்சலம் சிறு சிறு வியாபாரம் மற்றும் தொழில்களையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி பகவதியை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அருணாச்சலம் செய்து வந்த தொழிலுக்கு மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன  உளைச்சலுக்கு ஆளான அருணாச்சலம் இது குறித்து பேசியுள்ளார். அப்போது மனைவியின் குடும்பத்திற்கும் அவருக்குமிடையே பிரச்சினை எழுந்ததோடு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

தொடர்ந்து குழந்தை பிறந்த நிலையிலும் மகளை தன்னிடம் இருந்து பிரிக்கும் நோக்கோடு செயல்பட்டதாக கூறிய அருணாச்சலம், அதன் பின் தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு தனது குழந்தையை தன்னிடம் தர மறுப்பதோடு தத்துக் கொடுக்கப்போவதாகவும் கூறி வருகிறார். பல வழியில் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இறப்பிற்கான காரணம் குறித்தும் நடந்த பிரச்சினைகள் அனைத்தையும் பக்கம் பக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பின்பு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பின் வீட்டில் மயங்கி கிடந்த அருணாச்சலத்தை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு ஊரில் சிறந்த கபடி வீரராக திகழ்ந்ததால் மிகப் பிரபலமான புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணிக்காகத் தேர்வாகி விளையாகி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கபடி வீரரின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget