மேலும் அறிய

மனைவி, மாமனாரால் மன உளைச்சல்...கபடி வீரர் தற்கொலை - தென்காசியில் சோகம்

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணிக்காகத் தேர்வாகி விளையாகி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்த பரிமளம் என்பவரது மகன் அருணாச்சலம் (வயது 28). இவர் கபடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் பகவதி (வயது 25) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம்  நடந்துள்ளது. அதோடு அருணாச்சலம் சிறு சிறு வியாபாரம் மற்றும் தொழில்களையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி பகவதியை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அருணாச்சலம் செய்து வந்த தொழிலுக்கு மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன  உளைச்சலுக்கு ஆளான அருணாச்சலம் இது குறித்து பேசியுள்ளார். அப்போது மனைவியின் குடும்பத்திற்கும் அவருக்குமிடையே பிரச்சினை எழுந்ததோடு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

தொடர்ந்து குழந்தை பிறந்த நிலையிலும் மகளை தன்னிடம் இருந்து பிரிக்கும் நோக்கோடு செயல்பட்டதாக கூறிய அருணாச்சலம், அதன் பின் தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு தனது குழந்தையை தன்னிடம் தர மறுப்பதோடு தத்துக் கொடுக்கப்போவதாகவும் கூறி வருகிறார். பல வழியில் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இறப்பிற்கான காரணம் குறித்தும் நடந்த பிரச்சினைகள் அனைத்தையும் பக்கம் பக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பின்பு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பின் வீட்டில் மயங்கி கிடந்த அருணாச்சலத்தை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு ஊரில் சிறந்த கபடி வீரராக திகழ்ந்ததால் மிகப் பிரபலமான புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணிக்காகத் தேர்வாகி விளையாகி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கபடி வீரரின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget