மேலும் அறிய

மனைவி, மாமனாரால் மன உளைச்சல்...கபடி வீரர் தற்கொலை - தென்காசியில் சோகம்

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணிக்காகத் தேர்வாகி விளையாகி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்த பரிமளம் என்பவரது மகன் அருணாச்சலம் (வயது 28). இவர் கபடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் பகவதி (வயது 25) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம்  நடந்துள்ளது. அதோடு அருணாச்சலம் சிறு சிறு வியாபாரம் மற்றும் தொழில்களையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி பகவதியை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அருணாச்சலம் செய்து வந்த தொழிலுக்கு மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன  உளைச்சலுக்கு ஆளான அருணாச்சலம் இது குறித்து பேசியுள்ளார். அப்போது மனைவியின் குடும்பத்திற்கும் அவருக்குமிடையே பிரச்சினை எழுந்ததோடு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

தொடர்ந்து குழந்தை பிறந்த நிலையிலும் மகளை தன்னிடம் இருந்து பிரிக்கும் நோக்கோடு செயல்பட்டதாக கூறிய அருணாச்சலம், அதன் பின் தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு தனது குழந்தையை தன்னிடம் தர மறுப்பதோடு தத்துக் கொடுக்கப்போவதாகவும் கூறி வருகிறார். பல வழியில் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இறப்பிற்கான காரணம் குறித்தும் நடந்த பிரச்சினைகள் அனைத்தையும் பக்கம் பக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பின்பு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பின் வீட்டில் மயங்கி கிடந்த அருணாச்சலத்தை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு ஊரில் சிறந்த கபடி வீரராக திகழ்ந்ததால் மிகப் பிரபலமான புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணிக்காகத் தேர்வாகி விளையாகி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கபடி வீரரின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
Embed widget