மேலும் அறிய

Crime: காதலிக்கு மெசெஜ் அனுப்பிய நண்பன்.. பகீர் திட்டம் கொலை செய்த காதலன்... நடந்தது என்ன?

தெலங்கானாவில் காதலிக்கும் பெண்ணுடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவனை, சக மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் காதலிக்கும் பெண்ணுடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவனை, சக மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நவீன் என்ற மாணவனும்,  ஹரிஹர கிருஷ்ணா என்ற மாணவரும் படித்து வருகின்றனர். இருவரும் நல்கொண்டாவில் உள்ள நர்கெட்பள்ளியைச் சேர்ந்தவர்கள். நவீன் மற்றும் ஹரிஹர கிருஷ்ணா இருவரும் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. 

இவர்களில் நவீன் அந்த பெண்ணுடன் முதலில் காதலில் இருந்ததாகவும், ஆனால் அடுத்த ஓராண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அப்பெண்ணுடன் நவீன் நட்பில் இருந்துள்ளார். தினசரி இருவரும் எஸ்.எம்.எஸ்கள், செல்போன் உரையாடல்கள் என தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். அதேசமயம் அந்த பெண் தற்போது ஹரிஹர கிருஷ்ணாவுடன் காதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதனால் கிருஷ்ணாவுக்கு நவீன் அப்பெண்ணுடன் பேசுவது சுத்தமாக பிடிக்காமல் இருந்துள்ளது. இருவரும் நெருங்கி பழகுவது சந்தேகத்தை ஏற்படுத்தவே நவீனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தனது திட்டத்தின்படி  நவீனை அப்துல்லாபூர்மேட்டில் உள்ள நண்பரின் அறைக்கு மது அருந்த கிருஷ்ணா அழைத்துள்ளார். அங்கு இருவருக்குமிடையே அப்பெண் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் நவீனை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு உடலை ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார். இதனிடையே கிருஷ்ணாவை சந்தித்துவிட்டு வீடு திரும்பாததால் நவீனை காணவில்லை என அவரது பெற்றோர் நர்கெட்பல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசாரால் கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. 

அதேசமயம் கிருஷ்ணாவுடன் தனக்கு வாக்குவாதம் நடந்தது பற்றி  உடனடியாக நவீன் தனது தந்தை சங்கரய்யாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நவீன் உடலை நர்கெட்பல்லி போலீசார் அப்துல்லாபூர்மெட் போலீசாருடன் இணைந்து ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் கண்டுபிடித்தனர். 

பின்னர் தீவிர தேடுதலுக்குப் பின் கிருஷ்ணா தாமாகவே முன்வந்து நர்கெட்பல்லி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். முதலில் தான் கொலை செய்ததை மறுத்த கிருஷ்ணா பின்னர் ஒருவழியாக குற்றத்தைப் ஒப்புக் கொண்டார். பிப்ரவரி 17 அன்று அப்துல்லாபூர்மேட்டில் நடந்த இந்த சம்பவம் கிட்டதட்ட ஒரு வாரத்திற்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget