![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: பெண்களுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச வீடியோக்கள்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..
வெவ்வேறு நம்பர்களில் இருந்து ஒரு நபர் 5 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: பெண்களுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச வீடியோக்கள்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்.. Telangana: Hyderabad Man arrested for sending porn videos to 5 women from different Phone numbers Crime: பெண்களுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச வீடியோக்கள்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/4bf1fff34f3a65649bf13f3cf1b872c51657115793_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெண்களுக்கு மொபைல் போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அச்சுறுத்தல் மற்றும் தவறான குறுஞ்செய்திகள், வீடியோக்கள் வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி ஒரு நபர் பெண்ணிற்கு வேறு நம்பர்களிலிருந்து தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரைசுதீன்(58). அண்மையில் இவர் மீது பெண்களுக்காக அமைக்கப்பட்ட ஷீ டீம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் இந்த நபர் வேறு நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகாரை ஏற்று காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ரைசுதீன் செய்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் சில தகவல்கள் வெளியாகியன. அதன்படி ரைசுதீன் 5 பெண்களுக்கு வெவ்வேறு நம்பர்களை பயன்படுத்தி ஆபாச படங்களை அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் ரைசுதீன் மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையே உறவு சரியாக இல்லை என்று கருதப்படுகிறது. இதன்காரணமாக ரைசுதீன் ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்களின் பக்கங்களை பின் தொடர்ந்து அவர்களுடைய நம்பரை எடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த நம்பர்களுக்கு இவர் ஆபாச படங்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தற்போது ரைசுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா ஷீ டீம் காவல்துறையினர், “ரைசுதீன் மீது ஒரு பெண் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பெயரில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் இவர் 5 பெண்களுக்கு வெவ்வேறு நம்பர்களிலிருந்து ஆபாச படங்களை அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை கைது செய்து பவுன்பள்ளி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 5 பெண்களுக்கு ஒரு நபர் வெவ்வேறு நம்பர்களிலிருந்து ஆபாச படங்களை அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)