மேலும் அறிய

Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!

ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா. இன்று வழக்கம்போல பள்ளியில் மாணாக்கர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியை குடும்ப தகராறு காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா. இன்று வழக்கம்போல பள்ளியில் மாணாக்கர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒருவர் ஸ்ரீவித்யாவை தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதனைக் கண்டு அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகள் பயந்து அலறல் சத்தம் போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் சக ஆசிரியர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஸ்ரீவித்யா ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் மற்றும் ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட ஸ்ரீவித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இந்த கொலை குடும்ப தகராறு காரணமாக நடந்தது கண்டறியப்பட்டது.

அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை ஸ்ரீவித்யாவுக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஜயமுருகன்  என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் அசோக சிவசுந்தரி என்ற பெண் குழந்தை உள்ளது. விஜய முருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மனைவி ஸ்ரீவித்யா மீது விஜய முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை கெட்ட வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் சத்தம் போட்டு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து தனது மகள் அசோக சிவசுந்தரியை கூட்டிக்கொண்டு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீசில் ஸ்ரீவித்யா புகார் அளித்து இருந்தது தெரியவந்தது. 

கணவர் விஜய முருகனைப் பிரிந்து ஒரு மாதமாக ஓமலூர் பகுதியில் குடியிருந்து கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் தன் மீது போலீஸில் புகாரளித்த மனைவி மீது விஜய முருகன் கடும் கோபத்துடன் இருந்துள்ளார். தனது திட்டத்தின்படி இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய கணவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனது மூன்று வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து விஜய முருகன் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. 

தலைப்பு செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget