தமிழ் வருடப்பிறப்பு ஸ்பெஷல்.. சுவையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் சிறப்பான இறைவழிபாடு, உணவு பதார்த்தங்கள் உள்ளிட்டவை நம் வீடுகளில் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த தமிழ் வருடப்பிறப்பு உணவில் மாங்காய் பச்சடி இடம்பெறும். அது எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

மாங்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர், மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். அதில் வெல்லம் கரைத்து நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அந்த கலவை கெட்டியாகும் வரை கிளறவும்

கடைசியாக நெய்யில் நெய்யில் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து நன்கு வறுத்து இதனுடன் சேர்க்கவும்