மேலும் அறிய

பணியாற்றும் நிதி நிறுவனத்திலேயே 305 சவரன் நகைகள் கையாடல் : 4 ஊழியர்கள் கைது..

புதுக்கோட்டையில் எச்.டி.பி. நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து, மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான 305 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக, நிதிநிறுவன கிளை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் உள்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் எச்.டி.பி. நிதி நிறுவனமும் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உண்டு. புதுக்கோட்டையிலும் கடந்த 7 ஆண்டுகளாக எச்.டி.பி. நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் ஆண்டு தணிக்கை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான 305.625 சவரன் தங்க நகைகளை இருப்பில் இல்லாமல் இருப்பதை கண்ட தணிக்கையாளர்களும், நிதி நிறுவன அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அந்த நிதி நிறுவனத்தின் உயரதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே நிறுவனத்தில் பணியாற்றும் சோலை மணி,37, முத்துக்குமார்,27 மற்றும் உமாசங்கர்,43 ஆகிய மூன்று பேரும் இந்த நகைகளை திருடியது அம்பலமாகியது.


பணியாற்றும் நிதி நிறுவனத்திலேயே 305 சவரன் நகைகள் கையாடல் : 4 ஊழியர்கள் கைது..

இதையடுத்து, உடனடியாக தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை திருடி கையாடல் செய்ததாக, அந்த நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், தங்க நகை கடன் பிரிவில் பணியாற்றும் சோலைமணி, தனிநபர் கடன் பிரிவில் பணியாற்றும் முத்துக்குமார், கிளை மேலாளர் உமாசங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் இணைந்து கையாடல் செய்த நகைகளை புதுக்கோட்டை பழனியப்பா கார்னரில் உள்ள இன்டல்மணி என்ற மற்றொரு  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் மாரிமுத்து மற்றும் பெண் ஊழியர் ஒருவர் உதவியுடன் அதே நிறுவனத்தில் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் அடகு வைத்து இருப்பது தெரியவந்தது.

மேலும், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தணிக்கைக்கு வரும்போது, முன்கூட்டியே தகவல் தெரிந்தால் அடகு வைக்கப்பட்ட நிதி நிறுவனத்திலிருந்து அந்த சமயம் மட்டும் நகைகளை வாங்கி வந்து ஆடிட்டிங் வருபவர்களிடம் கணக்கு காட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது, அதிகாரிகள் திடீரென ஆடிட்டிங் வந்ததால் நகை கையாடல் செய்தது தெரிந்துவிட்டதாகவும் விசாரணையில் அவர்கள் மூவரும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இண்டல்மணி நிதி நிறுவன மேலாளர் மாரிமுத்துவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த பெண் ஊழியரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திருடி, மற்றொரு நிறுவனத்தில் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் அறிந்த அந்த நிறுவன வாடிக்கையாளர்கள் எச்.டி.பி. நிறுவனத்தின் முன்பு குவியத் தொடங்கினர். இண்டல்நிதி நிறுவனத்தில் அடகுவைத்த 305 சவரன் நகைகளையும் போலீசார் மீட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget