மேலும் அறிய

பணியாற்றும் நிதி நிறுவனத்திலேயே 305 சவரன் நகைகள் கையாடல் : 4 ஊழியர்கள் கைது..

புதுக்கோட்டையில் எச்.டி.பி. நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து, மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான 305 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக, நிதிநிறுவன கிளை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் உள்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் எச்.டி.பி. நிதி நிறுவனமும் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உண்டு. புதுக்கோட்டையிலும் கடந்த 7 ஆண்டுகளாக எச்.டி.பி. நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் ஆண்டு தணிக்கை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான 305.625 சவரன் தங்க நகைகளை இருப்பில் இல்லாமல் இருப்பதை கண்ட தணிக்கையாளர்களும், நிதி நிறுவன அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அந்த நிதி நிறுவனத்தின் உயரதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே நிறுவனத்தில் பணியாற்றும் சோலை மணி,37, முத்துக்குமார்,27 மற்றும் உமாசங்கர்,43 ஆகிய மூன்று பேரும் இந்த நகைகளை திருடியது அம்பலமாகியது.


பணியாற்றும் நிதி நிறுவனத்திலேயே 305 சவரன் நகைகள் கையாடல் : 4 ஊழியர்கள் கைது..

இதையடுத்து, உடனடியாக தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை திருடி கையாடல் செய்ததாக, அந்த நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், தங்க நகை கடன் பிரிவில் பணியாற்றும் சோலைமணி, தனிநபர் கடன் பிரிவில் பணியாற்றும் முத்துக்குமார், கிளை மேலாளர் உமாசங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் இணைந்து கையாடல் செய்த நகைகளை புதுக்கோட்டை பழனியப்பா கார்னரில் உள்ள இன்டல்மணி என்ற மற்றொரு  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் மாரிமுத்து மற்றும் பெண் ஊழியர் ஒருவர் உதவியுடன் அதே நிறுவனத்தில் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் அடகு வைத்து இருப்பது தெரியவந்தது.

மேலும், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தணிக்கைக்கு வரும்போது, முன்கூட்டியே தகவல் தெரிந்தால் அடகு வைக்கப்பட்ட நிதி நிறுவனத்திலிருந்து அந்த சமயம் மட்டும் நகைகளை வாங்கி வந்து ஆடிட்டிங் வருபவர்களிடம் கணக்கு காட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது, அதிகாரிகள் திடீரென ஆடிட்டிங் வந்ததால் நகை கையாடல் செய்தது தெரிந்துவிட்டதாகவும் விசாரணையில் அவர்கள் மூவரும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இண்டல்மணி நிதி நிறுவன மேலாளர் மாரிமுத்துவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த பெண் ஊழியரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திருடி, மற்றொரு நிறுவனத்தில் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் அறிந்த அந்த நிறுவன வாடிக்கையாளர்கள் எச்.டி.பி. நிறுவனத்தின் முன்பு குவியத் தொடங்கினர். இண்டல்நிதி நிறுவனத்தில் அடகுவைத்த 305 சவரன் நகைகளையும் போலீசார் மீட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: வெறுப்பை விதைப்பவர்கள் இந்துக்கள் இல்லை! ராகுல் பேச்சால் அனல் பறந்த மக்களவை
Breaking News LIVE: வெறுப்பை விதைப்பவர்கள் இந்துக்கள் இல்லை! ராகுல் பேச்சால் அனல் பறந்த மக்களவை
2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: வெறுப்பை விதைப்பவர்கள் இந்துக்கள் இல்லை! ராகுல் பேச்சால் அனல் பறந்த மக்களவை
Breaking News LIVE: வெறுப்பை விதைப்பவர்கள் இந்துக்கள் இல்லை! ராகுல் பேச்சால் அனல் பறந்த மக்களவை
2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Embed widget