மேலும் அறிய

‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

ஆபத்து எந்த ரூபத்திலும் வரும்... எந்த வழியிலும் வரும் என்பார்கள். அது எந்த மாதிரியான ஆபத்து என்பது அவரவருக்கு நடக்கும் துன்பங்களின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். இங்கே ஒருவருக்கு திருமண பத்திரிக்கை மூலம் ஆபத்து வந்துள்ளது. அதனால் நகை, பணத்தை இழந்து, கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் இளம்பெண். அதுவும் தலைநகர் சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள தாம்பரத்தில். என்ன நடந்தது இளம்பெண்ணுக்கு...

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் அகரம் தென்குறிச்சி நகரைச் சேர்ந்தவர் 43 வயதான ரவி. தச்சுத்தொழிலாளரியான இவருடைய மனைவி சுகுணா. 37 வயதான இவருக்கு 19 வயதில் புஷ்பலதா என்ற மகள் உள்ளார். ரவி வேலைக்குச் சென்ற சமயத்தில் தீபாவளி பண்டிக்கைக்காக குடும்பத்தாருக்கு புத்தாடை எடுத்த மனைவி சுகுணா, மேடவாக்கத்திற்கு சென்றுள்ளார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் மகள் புஷ்பலதா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.


‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

இந்நிலையில் மாலை நேரத்தில் தம்பதி போல ஒரு ஆணும், பெண்ணும் ரவி வீட்டிற்கு வந்துள்ளனர். புஷ்பலதாவிடம் பெற்றோர் குறித்து கேட்டுள்ளனர். அவர்கள்வெளியே சென்ற விபரத்தை புஷ்பலதா கூறியுள்ளார். தாங்கள் ரவியின் உறவினர்கள் என்றும், திருமண பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக அந்த தம்பதி கூறியுள்ளது. பத்திரிக்கை வைப்பதற்கு தாம்பூய தட்டு எடுத்து வருமாறும் கூறியுள்ளது. அதை நம்பி புஷ்பலதா தட்டு எடுப்பதற்காக கிச்சனுக்கு செல்ல அவரை பின் தொடர்ந்து வந்த அந்த தம்பதி, திடீரென புஷ்பலதா கழுத்தில் கத்தியை வைத்தது.

செய்வதறியாது திகைத்துப் போக, புஷ்பலதாவின் இரு கைகளை கட்டிய அந்த தம்பதி, சத்தம் போடாமல் இருக்க புஷ்பலதாவின் வாயில் துணியை வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

பின்னர் சிறிது நேரம் கழித்து கை கட்டுகளை அவிழ்த்த புஷ்பலதா, தன் தாய்க்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே அங்கு அலறி அடித்து வந்த சுகுணா, தன் மகளுடன் சேலையூர் போலீசாருக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளையடித்த தம்பதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget