மேலும் அறிய

‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

ஆபத்து எந்த ரூபத்திலும் வரும்... எந்த வழியிலும் வரும் என்பார்கள். அது எந்த மாதிரியான ஆபத்து என்பது அவரவருக்கு நடக்கும் துன்பங்களின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். இங்கே ஒருவருக்கு திருமண பத்திரிக்கை மூலம் ஆபத்து வந்துள்ளது. அதனால் நகை, பணத்தை இழந்து, கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் இளம்பெண். அதுவும் தலைநகர் சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள தாம்பரத்தில். என்ன நடந்தது இளம்பெண்ணுக்கு...

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் அகரம் தென்குறிச்சி நகரைச் சேர்ந்தவர் 43 வயதான ரவி. தச்சுத்தொழிலாளரியான இவருடைய மனைவி சுகுணா. 37 வயதான இவருக்கு 19 வயதில் புஷ்பலதா என்ற மகள் உள்ளார். ரவி வேலைக்குச் சென்ற சமயத்தில் தீபாவளி பண்டிக்கைக்காக குடும்பத்தாருக்கு புத்தாடை எடுத்த மனைவி சுகுணா, மேடவாக்கத்திற்கு சென்றுள்ளார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் மகள் புஷ்பலதா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.


‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

இந்நிலையில் மாலை நேரத்தில் தம்பதி போல ஒரு ஆணும், பெண்ணும் ரவி வீட்டிற்கு வந்துள்ளனர். புஷ்பலதாவிடம் பெற்றோர் குறித்து கேட்டுள்ளனர். அவர்கள்வெளியே சென்ற விபரத்தை புஷ்பலதா கூறியுள்ளார். தாங்கள் ரவியின் உறவினர்கள் என்றும், திருமண பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக அந்த தம்பதி கூறியுள்ளது. பத்திரிக்கை வைப்பதற்கு தாம்பூய தட்டு எடுத்து வருமாறும் கூறியுள்ளது. அதை நம்பி புஷ்பலதா தட்டு எடுப்பதற்காக கிச்சனுக்கு செல்ல அவரை பின் தொடர்ந்து வந்த அந்த தம்பதி, திடீரென புஷ்பலதா கழுத்தில் கத்தியை வைத்தது.

செய்வதறியாது திகைத்துப் போக, புஷ்பலதாவின் இரு கைகளை கட்டிய அந்த தம்பதி, சத்தம் போடாமல் இருக்க புஷ்பலதாவின் வாயில் துணியை வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

பின்னர் சிறிது நேரம் கழித்து கை கட்டுகளை அவிழ்த்த புஷ்பலதா, தன் தாய்க்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே அங்கு அலறி அடித்து வந்த சுகுணா, தன் மகளுடன் சேலையூர் போலீசாருக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளையடித்த தம்பதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
BT Arasakumar : 100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget