மேலும் அறிய

Bawaria Gang Case: பவாரியா வழக்கில் திடீர் திருப்பம்... ஜெயில்தார்சிங்கிற்கு ஜாமீன்

ஜோத்பூரில் இருந்து வழக்குக்கு ஆஜராவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் ஆஜராவதாக சிறை சூப்பிரெண்டிடம் நீதிமன்றத்திற்கு தகவல்.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வடமாநிலத்தை சேர்ந்த பவாரியா என்ற கொள்ளை கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்து காவலாளி கோபாலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த கும்பல் தாளமுத்து நடராஜனின் மகன்களை அடித்து காயப்படுத்தி விட்டு தனி அறையில் அடைத்து வைத்தது. பின்னர் வீட்டில் இருந்து 250 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தாளமுத்து நடராஜன் இருந்த அறையின் கதவை தட்டிய போது, துப்பாக்கியுடன் வெளியே வந்த தாளமுத்து நடராஜனையும் துப்பாக்கியால் சுட்டும், இரும்பு கம்பியால் அடித்தும் கொலை செய்தது. பின்னர் டபுள் பேரல் துப்பாக்கி, கை துப்பாக்கி, நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் கொள்ளை கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அவரது மனைவி பீனா தேவி, கொழுந்தியாள் சாந்து, அசோக் (எ) லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெகதீஸ், ஜெயில்தார்சிங் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Bawaria Gang Case: பவாரியா வழக்கில் திடீர் திருப்பம்... ஜெயில்தார்சிங்கிற்கு ஜாமீன்

இவர்களில் கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ், வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்களில் 2 பேர் ஜாமீனில் சென்று தலைமறைவாகிவிட்டனர். தற்போது அசோக் (எ) லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஜெகதீஷ் ஆகிய 4 பேர் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு சேலம் 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இதில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தேசிய சட்ட பணிகள் ஆணையம் மூலம் இலவசமாக வழக்கறிஞர்கள் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் (எ) லட்சுமணன், தாளமுத்து நடராஜன் கொலை நடக்கும்போது, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்ததாகவும். எனவே அச்சிறையின் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அச்சிறைக்கு நீதிமன்றம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜோத்பூரில் இருந்து வழக்குக்கு ஆஜராவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் ஆஜராவதாக, சிறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவ்வாறு சேலம் நீதிமன்றம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில், ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு சூப்பிரெண்டிடம் சென்று, அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம். இவ்வழக்கு வருகின்ற 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Bawaria Gang Case: பவாரியா வழக்கில் திடீர் திருப்பம்... ஜெயில்தார்சிங்கிற்கு ஜாமீன்

இதற்கிடையில் சிறையில் இருந்த ஜெயில்தார் சிங்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆசிரியரான இவர், கும்பல் தலைவரான ஓம் பிரகாசின் மருமகன். தமிழ்நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு சென்று கொடுக்கும் நகையை விற்பனை செய்து, அனைவருககும் பங்கிட்டு கொடுக்கும் வேலையை இவர்தான் செய்து வந்தார் என காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
அடப்பாவமே.. மதியம் 12 மணிக்கு வந்தவங்களுக்கு அதிர்ச்சி! மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு..!
அடப்பாவமே.. மதியம் 12 மணிக்கு வந்தவங்களுக்கு அதிர்ச்சி! மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு..!
”காதலிக்கலன்னா கொளுத்திடுவேன்” –கோவை பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
”காதலிக்கலன்னா கொளுத்திடுவேன்” –கோவை பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
CPM Slams TVK:
CPM Slams TVK: "ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல.." - தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!
TVK Vijay:
TVK Vijay: "முட்டு கொடுக்க முடியாது முதல்வரே!" பயிர்க்கடன் அறிவிப்பு.. தவெக மீது சொந்தக் கட்சி வேட்பாளரே அதிருப்தி!
CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Embed widget