மேலும் அறிய

Crime : பெற்ற தாயை சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகன்..! காரணம் என்ன?

ஹரியானாவில் பெற்ற தாயையே கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதியில் அமைந்துள்ள ஷிவ்புரி. இந்த பகுதியில் வசித்து வருபவர் வீணாகுமாரி. அவருக்கு வயது 66. இவர் அந்த மாநில சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ரன்வீர்குமார் பந்தாரி என்ற கணவரும், மணீஷ் என்ற மகனும் உள்ளனர். மணீஷ் ஒரு பி.டெக் பட்டதாரி ஆவார். ரன்வீர்குமார் பந்தாரியும், மணீசும் அதே ஷிவ்புரியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். வீணாகுமாரி வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இவர்கள் இவ்வாறு வசித்து வருகின்றனர்.

இருப்பினும், கணவருக்கும், மகனுக்கும் தினசரி உணவுகளை கொடுப்பதை வீணாகுமாரி வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல தனது மகனுக்கு இரவு சாப்பாடு கொடுப்பதற்காக வீணாகுமாரி சென்றுள்ளார்.


Crime : பெற்ற தாயை சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகன்..! காரணம் என்ன?

அப்போது, வீணாகுமாரி தனது மகன் மணீஷ் உடன் அருகில் இருந்த பூங்காவில் பேசிக்கொண்டிருந்தனர்.   அப்போது, ரன்வீர்குமார் பந்தாரியும் அங்கே சென்றுள்ளார். அவரைப் பார்த்த வீணாகுமாரி ரன்வீர்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வீணாகுமாரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்டு அச்சமுற்ற  ரன்வீர்குமார் பந்தாரி திரும்பிப் பார்த்தபோது வீணாகுமாரி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவரது மகன் மணீஷ் ரத்தக்கறையுடன் ஓடிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக ரன்வீர்குமார் அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார். உடனடியாக விரைந்த அக்கம்பக்கத்தினர் வீணாகுமாரியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரை அவரது மகன் மணீஷ் பல முறை கத்தியால் குத்தியிருந்ததால் அவரது உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்தது. இதனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Crime : பெற்ற தாயை சரமாரியாக குத்திக்கொன்ற பி.டெக் பட்டதாரி மகன்..! காரணம் என்ன?

காவல்துறையினர் பூங்கா அருகே இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மணீஷ் அவரது தாயார் வீணாகுமாரியை தாக்குவதும், அவரை கீழே பிடித்து தள்ளுவதும் பதிவாகியிருந்தது. மேலும், கத்தியால் அவரை பல முறை குத்துவதும் பதிவாகியிருந்தது. போலீசார் மணீஷ் மீது 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், போலீசார் இதுதொடர்பாக கூறியபோது கொலைக்கான காரணம் குறித்து முழு விசாரணையும் நடைபெற்ற பிறகே தெரிய வரும் என்றும், விரைவில் மணீஷை கைது செய்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். பெற்ற மகனே தாயை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget