மேலும் அறிய

Sivashankar Baba Case: சிவசங்கர் பாபாவிடம் 3 நாள் சிபிசிஐடி விசாரணை; நீதிமன்றம் அனுமதி

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாலியல் புகாரில் கைதான தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அளித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாமியார் சிவசங்கர் பாபா கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டது எப்படி ?

முன்னதாக சிவசங்கர் பாபா தப்பி ஓட திட்டமிட்டதாக தகவல் வந்ததை அடுத்து டில்லி விரைந்தது தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா. 

இதனைத் தொடர்ந்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 


Sivashankar Baba Case: சிவசங்கர் பாபாவிடம் 3 நாள் சிபிசிஐடி விசாரணை; நீதிமன்றம் அனுமதி

இந்நிலையில், சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடைபெற்றது. பெண் ஆய்வாளர் உட்பட 5 அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வீடியோ பதிவு செய்துள்ளனர். விசாரணையில்,  சிவசங்கர் பாபாவுக்கு டேராடூன் மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது உறுதியானது. மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்தது. அதன் பின்னர்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர் செய்யப்பட்டார். சிபிசிஐடியினர் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்படுபவர் சிவசங்கர். இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: காஷ்மீருக்கு நேரம் சரி இல்ல.. டால் ஏரியில் கவிழ்ந்த படகு.. உதவி கேட்டு அலறிய மக்கள்
காஷ்மீருக்கு நேரம் சரி இல்ல.. டால் ஏரியில் கவிழ்ந்த படகு.. உதவி கேட்டு அலறிய மக்கள்
IPL 2025 GT vs SRH: சுளுக்கெடுத்த சுப்மன், சுழட்டி அடித்த சுதர்சன், பட்லர் பயங்கரம்! 225 ரன்களை எட்டுமா ஹைதரபாத்?
IPL 2025 GT vs SRH: சுளுக்கெடுத்த சுப்மன், சுழட்டி அடித்த சுதர்சன், பட்லர் பயங்கரம்! 225 ரன்களை எட்டுமா ஹைதரபாத்?
பாகிஸ்தான் பிரதமர் யூடீயூப்பை பிளாக் செய்த இந்தியா..கிரிக்கெட் வீரர்களில் யார்...எதற்கு இது?
பாகிஸ்தான் பிரதமர் யூடீயூப்பை பிளாக் செய்த இந்தியா..கிரிக்கெட் வீரர்களில் யார்...எதற்கு இது?
Vizhinjam Port: விழிஞ்சம் துறைமுகத்தை அதானிக்கு கொடுத்தே காங்கிரஸ்தான் -  நிர்மலா சீதாராமன் ஆவேசம்
Vizhinjam Port: விழிஞ்சம் துறைமுகத்தை அதானிக்கு கொடுத்தே காங்கிரஸ்தான் - நிர்மலா சீதாராமன் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ராகுல் காந்தியின் அஸ்திரம்! காலி செய்த மோடி! பாஜக போட்ட ஸ்கெட்ச்”மோடி ஜி போராளி! அவர் மேல நம்பிக்கை இருக்கு” பாராட்டி தள்ளிய ரஜினிCongress vs dmk: வார்த்தையை விட்ட காங்கிரஸ்! ஸ்டாலின் செய்த சம்பவம்! சீனுக்கு வந்த ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: காஷ்மீருக்கு நேரம் சரி இல்ல.. டால் ஏரியில் கவிழ்ந்த படகு.. உதவி கேட்டு அலறிய மக்கள்
காஷ்மீருக்கு நேரம் சரி இல்ல.. டால் ஏரியில் கவிழ்ந்த படகு.. உதவி கேட்டு அலறிய மக்கள்
IPL 2025 GT vs SRH: சுளுக்கெடுத்த சுப்மன், சுழட்டி அடித்த சுதர்சன், பட்லர் பயங்கரம்! 225 ரன்களை எட்டுமா ஹைதரபாத்?
IPL 2025 GT vs SRH: சுளுக்கெடுத்த சுப்மன், சுழட்டி அடித்த சுதர்சன், பட்லர் பயங்கரம்! 225 ரன்களை எட்டுமா ஹைதரபாத்?
பாகிஸ்தான் பிரதமர் யூடீயூப்பை பிளாக் செய்த இந்தியா..கிரிக்கெட் வீரர்களில் யார்...எதற்கு இது?
பாகிஸ்தான் பிரதமர் யூடீயூப்பை பிளாக் செய்த இந்தியா..கிரிக்கெட் வீரர்களில் யார்...எதற்கு இது?
Vizhinjam Port: விழிஞ்சம் துறைமுகத்தை அதானிக்கு கொடுத்தே காங்கிரஸ்தான் -  நிர்மலா சீதாராமன் ஆவேசம்
Vizhinjam Port: விழிஞ்சம் துறைமுகத்தை அதானிக்கு கொடுத்தே காங்கிரஸ்தான் - நிர்மலா சீதாராமன் ஆவேசம்
தடுமாறும் பாகிஸ்தான் அரசு...சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரிடம் உதவி கேட்ட தற்போதைய பிரதமர்!
தடுமாறும் பாகிஸ்தான் அரசு...சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரிடம் உதவி கேட்ட தற்போதைய பிரதமர்!
Madhuri Dixit: கட் சொன்ன பிறகும் கூட கடித்த உதட்டை விடாத நடிகர்; ரத்தம் சிந்த ஓடிய மாதுரி தீக்‌ஷித்!
Madhuri Dixit: கட் சொன்ன பிறகும் கூட கடித்த உதட்டை விடாத நடிகர்; ரத்தம் சிந்த ஓடிய மாதுரி தீக்‌ஷித்!
Koyambedu Pattabiram Metro: கோயம்பேடு to பட்டாபிராம்.. இனி டிராபிஃக் இல்லாமல் மெட்ரோவில் போகலாம்.. முழு விவரம் இதோ...
கோயம்பேடு to பட்டாபிராம்.. இனி டிராபிஃக் இல்லாமல் மெட்ரோவில் போகலாம்.. முழு விவரம் இதோ...
Ponmudi Upset: பறிபோன பதவி.. சொந்த கோட்டையிலேயே டம்மியான பொன்முடி.. கைமாறும் விழுப்புரம்.?
பறிபோன பதவி.. சொந்த கோட்டையிலேயே டம்மியான பொன்முடி.. கைமாறும் விழுப்புரம்.?
Embed widget