மேலும் அறிய

சிவசங்கர் பாபாவிற்கு உடந்தை : முன்ஜாமீன் கோரி பள்ளி ஆசிரியை மனு

சிவசங்கர் பாபாவின் பாலியல் தொல்லைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபா வெங்கட்ராமன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

செங்கல்பட்டு, கேளம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சர்வதேச தனியார் உண்டு உறைவிட பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்ட சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு அளித்தனர். இதையடுத்து, சிவசங்கர் பாபாவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியது.

ஆனால், அவர் ஆஜராகாத நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லியில் கைது செய்தனர். பின்னர். சென்னை கொண்டு வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.


சிவசங்கர் பாபாவிற்கு உடந்தை : முன்ஜாமீன் கோரி பள்ளி ஆசிரியை மனு

இந்த வழக்கில், போலீசாரால் சிவசங்கர் பாபாவிற்கு உதவியாக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியையகள் சுஷ்மிதா மற்றும் தீபா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆசிரியை சுஷ்மிதா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியை தீபா தலைமறைவாகினார்.

இந்த நிலையில், தலைமறைவாகியுள்ள தீபா வெங்கட்ராமன் தற்போது முன்ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

“ முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். சிவசங்கர் பாா மீது போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கில் தேவையில்லாமல் என்னையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.

என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கற்பித்தலில் உள்ள ஈடுபாட்டால், தனியார் வங்கி அதிகாரி வேலையை கைவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.”


சிவசங்கர் பாபாவிற்கு உடந்தை : முன்ஜாமீன் கோரி பள்ளி ஆசிரியை மனு

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.  இந்த மனு அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தலைமறைவானதால் அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததும், பின்னர் அவர் மொட்டை அடித்துக்கொண்டு திரிந்த நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சிவசங்கர் பாபாவின் பாலியல் சீண்டல்களுக்கு ஒத்துழைப்பதற்காக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியை சுஷ்மிதா அந்த பள்ளியின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
மயிலாடுதுறை ஆணவக் கொலை சந்தேகம்: காதலி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்; அலறிய பெண்கள்!
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Hyundai Creta EV: மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Embed widget