மேலும் அறிய

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல்; குடும்பத்துடன் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் தஞ்சம்

நள்ளிரவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள சரவணன் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் பெண் வேறு இடத்திற்கு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், பணியில் சேர்வதற்காக  நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகளுடன், பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த தகவலையும் சரவணனிடம் பகிர்ந்துள்ளார். சரவணன் தானும் தன்னுடன் வருவதாக கூறியுள்ளார். ஆனால் செவிலியர் மறுத்துள்ளார்.
 
 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல்; குடும்பத்துடன் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் தஞ்சம்
 
சரவணன் தனது நண்பர்களான  சஞ்சய், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். செவிலியர் பெண்ணை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று காஞ்சிபுரத்தில், வலுக்கட்டயமாக பெண்ணை காரில் ஏற்றி உள்ளனர். இதனையடுத்து பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனை அடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, அப்பெண்ணை நள்ளிரவில் செங்கல்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல்; குடும்பத்துடன் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் தஞ்சம்
 
இந்நிலையில் சரவணன், நேற்று ஜாமீனில் வெளியே வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு சரவணனின் நண்பர்கள் சிலர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று , கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்து செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து தஞ்சம், அடைந்தனர். இதனைஅடுத்து உடனடியாக செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக, புகார் அளித்த பெண்ணை சிலர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25):அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25):அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
Embed widget