மேலும் அறிய

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப்போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகத்தரான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார், 48 வயது பெண் ஒருவர். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். துபாயில் வசித்து வந்த அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் தனது 3 குழந்தைகளுடன் இந்தியா திரும்பிய அவர், கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த எம்.என்.சி நிறுனத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் ஷர்மா (49) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

அதில், ”என் தொழிலை மறுகட்டமைப்பு செய்ய வேண்டுமென்பதற்காக, எனது விவரங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தேன். அதனைப் பார்த்து ஆனந்த் ஷர்மா தொழில் ரீதியாக உதவுவதாக தொடர்புகொண்டு தெரிவித்தார். பின்னர் அடிக்கடி உரையாடி  நெருக்கமாக பழகினார். தான் விவகாரத்து ஆனவர் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் ஆனந்த் ஷர்மா கூறினார். அவருடைய மனைவி மற்றும் மூத்த மகள் ஆக்ராவில் இருப்பதாகவும், எனது விவகாரத்திற்கு உதவி செய்கிறேன் எனவும் கூறினார். பின்னர் நாளடைவில் என்னை காதலிப்பதாக கூறினார். ஜென்டில்மேன் போல பேசியதால் அவரை நம்பினேன். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக கூறி வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பின்னர் விவகாரத்து ஆனதாக கூறிய மனைவியுடன் ஆனந்த் ஷர்மா வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதுகுறித்து கேட்டதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறினார். ஒரு முறை எதேச்சையாக அவரது மொபைல்ஃபோனை பார்த்த போது, அதில் பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப் போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகரத்தான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது ஆனந்த ஷர்மாவின் சகோதரர் பிரபாத் ஷர்மா என்னை மிரட்டினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரளித்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கோவை மத்திய மகளிர் காவல் துறையினர் ஆனந்த் ஷர்மா மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல அப்பெண்ணை மிரட்டிய ஆனந்த் ஷர்மாவின் சகோதாரர் பிரதாப் ஷர்மா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

சிசிடிவி கண்காணிப்பு.. பணம் கேட்டால் திட்டு.. டார்ச்சர் செய்த மாமனார்.. போட்டுத்தள்ளிய மருமகள்!
சிசிடிவி கண்காணிப்பு.. பணம் கேட்டால் திட்டு.. டார்ச்சர் செய்த மாமனார்.. போட்டுத்தள்ளிய மருமகள்!
வயதான நபருடன் தொடர்பு.. மனைவியை கொன்ற கணவன்.. ஃப்ரிட்ஜில் இருந்த தலை.. நடந்தது என்ன?
வயதான நபருடன் தொடர்பு.. மனைவியை கொன்ற கணவன்.. ஃப்ரிட்ஜில் இருந்த தலை.. நடந்தது என்ன?
தமிழக வெற்றி கழக கொடியை சட்டென கழற்றியது ஏன்? மயிலாடுதுறை விபத்தில் மறைக்கப்படும் ரகசியம்!
தமிழக வெற்றி கழக கொடியை சட்டென கழற்றியது ஏன்? மயிலாடுதுறை விபத்தில் மறைக்கப்படும் ரகசியம்!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் !! கொந்தளித்த பெற்றோர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் !! கொந்தளித்த பெற்றோர்

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
TVK vs DMK:
TVK vs DMK: "பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி.." உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!
Vinayagar Chaturthi Holiday: மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
Embed widget