மேலும் அறிய

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப்போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகத்தரான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார், 48 வயது பெண் ஒருவர். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். துபாயில் வசித்து வந்த அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் தனது 3 குழந்தைகளுடன் இந்தியா திரும்பிய அவர், கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த எம்.என்.சி நிறுனத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் ஷர்மா (49) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

அதில், ”என் தொழிலை மறுகட்டமைப்பு செய்ய வேண்டுமென்பதற்காக, எனது விவரங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தேன். அதனைப் பார்த்து ஆனந்த் ஷர்மா தொழில் ரீதியாக உதவுவதாக தொடர்புகொண்டு தெரிவித்தார். பின்னர் அடிக்கடி உரையாடி  நெருக்கமாக பழகினார். தான் விவகாரத்து ஆனவர் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் ஆனந்த் ஷர்மா கூறினார். அவருடைய மனைவி மற்றும் மூத்த மகள் ஆக்ராவில் இருப்பதாகவும், எனது விவகாரத்திற்கு உதவி செய்கிறேன் எனவும் கூறினார். பின்னர் நாளடைவில் என்னை காதலிப்பதாக கூறினார். ஜென்டில்மேன் போல பேசியதால் அவரை நம்பினேன். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக கூறி வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பின்னர் விவகாரத்து ஆனதாக கூறிய மனைவியுடன் ஆனந்த் ஷர்மா வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதுகுறித்து கேட்டதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறினார். ஒரு முறை எதேச்சையாக அவரது மொபைல்ஃபோனை பார்த்த போது, அதில் பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப் போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகரத்தான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது ஆனந்த ஷர்மாவின் சகோதரர் பிரபாத் ஷர்மா என்னை மிரட்டினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரளித்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கோவை மத்திய மகளிர் காவல் துறையினர் ஆனந்த் ஷர்மா மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல அப்பெண்ணை மிரட்டிய ஆனந்த் ஷர்மாவின் சகோதாரர் பிரதாப் ஷர்மா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
"விஜய் அரசியலுக்கு வருவது பெரிய மாற்றம்" - ராம்தாஸ் அத்வாலே அதிரடி கருத்து...
Embed widget