மேலும் அறிய

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப்போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகத்தரான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார், 48 வயது பெண் ஒருவர். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். துபாயில் வசித்து வந்த அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் தனது 3 குழந்தைகளுடன் இந்தியா திரும்பிய அவர், கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த எம்.என்.சி நிறுனத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் ஷர்மா (49) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

அதில், ”என் தொழிலை மறுகட்டமைப்பு செய்ய வேண்டுமென்பதற்காக, எனது விவரங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தேன். அதனைப் பார்த்து ஆனந்த் ஷர்மா தொழில் ரீதியாக உதவுவதாக தொடர்புகொண்டு தெரிவித்தார். பின்னர் அடிக்கடி உரையாடி  நெருக்கமாக பழகினார். தான் விவகாரத்து ஆனவர் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் ஆனந்த் ஷர்மா கூறினார். அவருடைய மனைவி மற்றும் மூத்த மகள் ஆக்ராவில் இருப்பதாகவும், எனது விவகாரத்திற்கு உதவி செய்கிறேன் எனவும் கூறினார். பின்னர் நாளடைவில் என்னை காதலிப்பதாக கூறினார். ஜென்டில்மேன் போல பேசியதால் அவரை நம்பினேன். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக கூறி வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பின்னர் விவகாரத்து ஆனதாக கூறிய மனைவியுடன் ஆனந்த் ஷர்மா வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதுகுறித்து கேட்டதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறினார். ஒரு முறை எதேச்சையாக அவரது மொபைல்ஃபோனை பார்த்த போது, அதில் பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப் போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகரத்தான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது ஆனந்த ஷர்மாவின் சகோதரர் பிரபாத் ஷர்மா என்னை மிரட்டினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரளித்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கோவை மத்திய மகளிர் காவல் துறையினர் ஆனந்த் ஷர்மா மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல அப்பெண்ணை மிரட்டிய ஆனந்த் ஷர்மாவின் சகோதாரர் பிரதாப் ஷர்மா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
Embed widget