மேலும் அறிய

முதலிரவு அறையில் ரகசிய கேமரா: நூதன முறையில் பணம் பறித்த போலி மனைவி!

கேரளாவில் முதலிரவு அறையில் ரகசிய கேமரா வைத்து கணவனை நூதன முறையில் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த போலி மனைவி உள்பட மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருமணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருந்தார். அப்போது, தரகர் ஒருவர் மூலமாக காசர்கோடு அருகே உள்ள நாயன்மார்மூலை பகுதியைச் சேர்ந்த ஷாஜிதா என்ற பெண்ணுக்கும் மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, 30 வயதான ஷாஜிதாவின் பெற்றோர் என்.ஏ. உம்மர் மற்றும் ஷாஜிதாவின் தாய் பாத்திமா அப்துல் ஸத்தரிடம் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர். இருதரப்பு சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அப்துல் ஸத்தாருக்கும், ஷாஜிதாவிற்கும் திருமணம் நடந்தது.


முதலிரவு அறையில் ரகசிய கேமரா: நூதன முறையில் பணம் பறித்த போலி மனைவி!

திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் இருவரையும் கொவ்வல்பள்ளியில் குடியிருப்பு வீடு ஒன்றில் வாடகைக்கு குடியேறினர். அந்த புதிய வீட்டில் புதுமணத் தம்பதியினரின் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

அப்போது, இக்பால் என்பவர் அப்துல் ஸத்தாரை நேரில் சந்தித்து அவரிடம் வீடியோ ஒன்றை காட்டியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த அப்துல் ஸத்தார் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த வீடியோவில் அப்துல் ஸத்தாரின் முதலிரவு காட்சிகள் அனைத்தும் இருந்துள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப விடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் வேண்டும் என்று அப்துல் ஸத்தாரை இக்பால் மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்த அப்துல் ஸத்தார், அவருக்கு கொஞ்சம், கொஞ்சமாக 3.75 லட்சம் பணத்தையும், ஏழரை சவரன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளார்.

ஆனாலும், இக்பால் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டியதால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாத அப்துல் ஸத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அப்துல் ஸத்தாரை மிரட்டிய இக்பாலை பிடித்து போலீசார் விசாரிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.


முதலிரவு அறையில் ரகசிய கேமரா: நூதன முறையில் பணம் பறித்த போலி மனைவி!

அப்துல் ஸத்தாருக்கு நடந்ததே போலி திருமணம் என்றும், இந்த பணம் பறிப்பு செயலில் அப்துல் ஸத்தாரின் மனைவி ஷாஜிதா உடந்தை என்றும் கூறியுள்ளார். மேலும், என்.ஏ. உம்மரும், பாத்திமாவும் ஷாஜிதாவின் உண்மையான பெற்றோர் இல்லையென்றும் நான்கு பேரும் சேர்ந்துதான் அப்துல் ஸத்தாரை ஏமாற்றி பணத்தை பறித்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் குடியேறிய புது வீட்டில் ரகசிய கேமராவை வைத்து அவர்களது முதலிரவு காட்சியையும் நான்கு பேரும் இணைந்துதான் எடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணையில் ஷாஜிதா மீது ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு பகுதியில் திருமண மோசடி வழக்கு உள்ளதாகவும், என்.ஏ. உம்மர் மற்றும் பாத்திமா உண்மையான தம்பதியினர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget