மேலும் அறிய

கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

கடல்வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகளை மயிலாடுதுறை அருகே காவல்துறையினர் பிடித்து ஒருவர் கைது செய்துள்ளனர்.

கடல்வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த  கடல் அட்டைகளை மயிலாடுதுறை அருகே காவல்துறையினர் பிடித்து ஒருவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலின் இளவரசி 

கடலின் இளவரசி என கடல் அட்டைகள் கூறப்படுகிறது. ஒருவித கடினமான உடல் தோலையும், உருண்டையான அமைப்பையும், அடர்ந்த கருப்பு அல்லது மணல் நிறத்தையும் கடல் அட்டைகள் காணப்படும். கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக, கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001 -ம் ஆண்டு ஜுலை 11-ம் தேதி தடை விதித்தது. அதில், குறிப்பாக கடல் அட்டையும் ஒன்றாகும். இந்த கடல் அட்டைகளை தடை செய்ய காரணம், இவை அதிகமாக பிடிக்கப்பட்டால் அந்த இனமே அழிந்துவிடும் என்கிறார்கள். 


கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் கடல் அட்டை 

முக்கியமாக, சிங்கப்பூர், மலேசியா, சீனா போன்ற நாடுகளில், இதுபோன்ற உயிரினங்களுக்கு நிறைய வரவேற்பு உண்டு. மருந்தாகவும் , உணவாகவும் என இந்த கடல் அட்டைகளை இரண்டு வகையான பயன்பாடுகளுக்காக உபயோகிக்கறார்கள். இதில் ராஜ கடல் அட்டையானது மிகவும் விலை உயர்ந்தாகும். அதனால், இதற்கு தான் நிறைய கிராக்கி இருக்கிறதாம். உடல் சோர்வு, இயலாமை, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மூட்டு வலி இந்த வகை நோய்களுக்கு இந்த கடல் அட்டைகள் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.


கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

இந்த கடல் அட்டைகளில் காண்டிரைட்டின் சல்பேட், கீழ்வாத நோயையும் குணப்படுத்த உதவும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல, கடல் அட்டை சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்பிக்கையும் கூட. கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே, இதுதான் என்கிறார்கள். ஆனாலும், இது மூடநம்பிக்கை என்றும், இதுவரை அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் சொல்கிறார்கள். தவறாக பரவிய வதந்தியால், இதற்கு வெளிநாடுகளில் ஏக வரவேற்பு உள்ளதாம். எனினும் மற்ற சிறப்புகள் இருந்தாலும்கூட, இந்த அட்டைகளை பிடிப்பதற்கு உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்டனை விபரம் 

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இதற்கான போராட்டங்களை மீனவர்கள் கையில் எடுத்தாலும்கூட, இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க வில்லை. கடல் அட்டைகளை பிடிப்பதற்கு என மீன்களுக்கு உள்ளது போன்று பிரத்தியேகமாக எந்த ஒரு வலையும் கிடையாது. மீன்கள் பிடிக்க பயன்படுத்தும் வலையிலேயே, கடல் அட்டைகளும் வந்து மாட்டிக் கொண்டு விடும். அவ்வாறு மாட்டும் கடல் அட்டைகளை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும். அதனை விடுத்து அவைகளை கரைக்குக்கொண்டு வந்தாலே மீனவர்களுக்கு 7 ஆண்டு சிறைவாசமும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பறிமுதல் செய்யப்படும் கடல் அட்டைகள், உயிருடன் இருந்தால் மறுபடியும் கடலில் விடப்படும். ஒருவேளை அவை இறந்த நிலையில் இருந்தால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, அழிக்கப்படும்.

இந்தியாவில் மட்டும் இதற்கு தடை 

கடல் அட்டைகளை, இந்தியாவில் சட்டவிரோதமாக பிடித்து அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதேபோல, இலங்கைக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கொண்டு செல்வதும், இலங்கையில் இருந்து பல்வேறு பொருட்களை கடத்தி வரும் நிகழ்வுகளும் தொடர் கதையாக உள்ளது. இதில், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளும், இலங்கைக்கு கடத்திச்செல்லும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.


கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மிக அருகே இலங்கை இருப்பதால் கோடியக்கரை கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், மஞ்சள், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறையில் பிடிப்பட்ட கடல் அட்டை 

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும்பகுதி கடலோர பகுதிகள் ஆகும். இங்கு மீன்பிடி தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன்காரணமாக இங்கு மீனவர்களின் வலையில் சிக்கும் கடல் அட்டைகளை சேகரித்து அவறை வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி நண்டலார் சோதனை சாவடியில் பொறையார் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த 38 வயதான மழலைமாறன் என்பவர் தரங்கம்பாடி கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 கிலோ கடல் அட்டையை கடத்தி வந்தது தெரிய வந்தது. 


கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

காவல்துறையினர் விசாரணை 

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மழலைமாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்து சீர்காழி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சீர்காழி வனத்துறையினர் மழலை மாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் காரைக்கால் துறைமுகம் பகுதியில் இருந்து படகு மூலமாக இலங்கைகு கடல் அட்டை கடத்த இருந்தது தெரிய வந்தது. மேலும் இதில் தொடர்புடையவர்கள் விபரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை ஈடுப்பட்டுள்ளனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை 

மேலும் இதுகுறித்து சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறுகையில், இலங்கையில் இந்த கடல் அட்டைகளை உணவுப் பொருளுக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிய வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட வனவிலங்குகளையும், கடல் அட்டைகளையும். யாராலும் பிடிக்கப்பட்டாலோ, துன்புறுத்தினாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget