மேலும் அறிய

சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரம்: சேலம் தனியார் மருத்துவமனைக்கு சீல்!

தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர், ஆவணம் பாதுகாப்பு வரை உள்ளிட்ட 8 அறைகளை முழுமையாக மூடி சீல் வைத்தனர்.

ஈரோடு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினரிடம் பலமுறை தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து கூறியுள்ளார். அதுகுறித்து விசாரித்தபோது சிறுமியுடன் வளர்ப்புத் தந்தை பாலியல் உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரம்: சேலம் தனியார் மருத்துவமனைக்கு சீல்!

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அதில் சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வளர்ப்பு தந்தையான சையத் அலி என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் மூலம் வரும் கருமுட்டைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்கு சிறுமியின் தாய் இந்திராணி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மாலதி உள்ளிட்டோரை கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு கருமுட்டை மருத்துவமனையில் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையில், சிறுமியின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை செய்துகொடுத்த ஜோசப் என்பவரும் கைது செய்யப்பட்டார். 

சிறுமியின் வளர்ப்புத் தந்தையான சையத் அலி, சிறுமியின் 12 வயதில் இருந்து அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதில் 5,000 ரூபாய் இடைத்தரகராக செயல்பட்ட மாலதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட சுகாதாரத்துறையினர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.

சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரம்: சேலம் தனியார் மருத்துவமனைக்கு சீல்!

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை கடந்த மாதம் 15 ஆம் தேதி மூடப்பட்டது. மருத்துவமனையில் ஆறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. புதிதாக நோயாளிகள் சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை.

தற்போது சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து திரும்பிய நிலையில் சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் இன்று தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர், ஆவணம் பாதுகாப்பு வரை உள்ளிட்ட 8 அறைகளை முழுமையாக மூடி சீல் வைத்தனர். பின்ன சீல் வைத்த உடன் மருத்துவமனையின் சாவியை மருத்துவமனையின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறியது,

கருமுட்டை விவகாரத்தில் சேலம் தனியார் மருத்துவமனை முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூடுதல் அவகாசமாக இரண்டு வாரங்கள் கொடுக்கப்பட்டது. தற்போது நோயாளிகள் குணமடைந்து திரும்பி நிலையில் தனியார் மருத்துவமனையில் உள்ள எட்டு அறைகளும் முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
MK Stalin greets Rahul : 'உடன்பிறப்பை தவிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
'உடன்பிறப்பை தவிர்த்த மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
Mojtaba Vs Trump: “ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலுக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
“ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலுக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
Annamalai: ”திமுகவின் நிதி நிர்வாக சீர்கேடுகள்” CM விஜய்க்கு வாழ்த்துடன் அட்வைஸ் தந்த அண்ணாமலை
”திமுகவின் நிதி நிர்வாக சீர்கேடுகள்” CM விஜய்க்கு வாழ்த்துடன் அட்வைஸ் தந்த அண்ணாமலை
TN Assembly LIVE Today: சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
Mekedatu dam : ’உணர்வுப்பூர்வமான பிரச்னை’ மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்..!
'காவிரி நீரை விட்டுத் தர முடியாது’ கர்நாடக அரசுக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு..!
Embed widget