மேலும் அறிய

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

உணவில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஐந்து ரோடு அருகே பிரபல பிரியாணி கிடையான ஏ.எம் பிரியாணி கடை உள்ளது. அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நண்பர்களுடன் கடையில் கடந்த 25-ஆம் தேதி சாப்பிட வந்தவர்கள் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளனர். அப்பொழுது பிரியாணி தால்சா எனப்படும் குழம்பு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒருவருடைய தட்டில் தால்சாவில் புழு ஒன்று இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

உடனடியாக கடை ஊழியர்களை அழைத்து குழம்பில் புழு உள்ளது, யாருக்கும் இதை பரிமாறவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பொருட்படுத்தாமல் கடை ஊழியர்கள் பிற வாடிக்கையாளர்களுக்கும் குழம்பு வழங்கியதால் கோபமடைந்த அவர் கடையின் உரிமையாளர் அழைத்து வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உணவு பாதுகாப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு கதிரவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து கடையில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவை சோதனைக்கு எடுத்துச் சென்றனர். 

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கூறுகையில், தனது நண்பர்களுடன் உணவு அருந்த கடைக்கு வந்ததாகவும், உணவில் புழு இருந்ததை கண்டவுடன் கடையின் ஊழியரிடம் தெரிவித்தேன். அவர் அதைப் பொருட்படுத்தாமல் அருகில் இருந்தவர்களுக்கு அதே குழம்பை பரிமாறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தேன். உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புழு இருந்த குழம்பை சாப்பிட்ட எங்களுக்கு வாந்தி, தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. தரமான உணவு கொடுக்காத இந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

இதனிடையே கடையின் உரிமையாளர் கூறும்போது, உணவகத்தில் உணவு உட்கொண்டுவிட்டு அதற்கான பணம் கேட்டபோது வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும், இதனிடையே பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். இது முதல் முறையல்ல பலமுறை இது போன்று ஐந்திலிருந்து பத்து நபர்கள் வரை அழைத்து வந்து சாப்பிட்டுவிட்டு உணவில் குறை உள்ளதாக கூறி பணம் செலுத்தாமல் செல்வார்கள். அதே போன்று தான் இன்றும் ஆறு பேருடன் வந்து பிரச்சனையில் ஈடுபட்டுவருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட கிளைகளை நடத்தி வருகிறேன். இவர்களைத் தவிர வேறு யாரும் இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடுவதில்லை. மேலும் தங்களது உணவு தரம் குறித்து எங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

இது குறித்து கடையின் உரிமையாளர் அழைத்தவுடன் வந்த காவல்துறையினர் புழு இருந்ததாக குற்றம் சாட்டிய வாடிக்கையாளர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(28), அவரது நண்பர்களான புதுக்கோட்டையை சேர்ந்த பல்மருத்துவர் பாஸ்கரன்(28), மற்றொரு பல் மருத்துவர் பெரம்பலூரை சேர்ந்த சதீஷ்குமார்(28), சித்த மருத்துவ மாணவர் கோபிநாத்(25), சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன்(29), ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ரோஜன் என்கிற பிரபு(33) பணம் பறிப்பதற்காக கடையைப் பற்றி தவறான செய்தி பரப்பியதற்காக 3 மருத்துவர்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, திடீர் திருப்பமாக உணவில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் எந்த தவறும் செய்யாத மாணவர்களை கைது செய்த காவல்துறையினரை நீதிபதி கடுமையாக கண்டித்தார். பின்னர் மாணவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget