Crime: பெட்ரோல் பங்கில் ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! அத்துமீறிய ஊழியரை தட்டித்தூக்கிய போலீஸ்!
ஜெய்பூருக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ஜெய்பூருக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணிடம் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பலரும் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, இந்தியாவில் சுற்றிப் பார்க்கும் இடங்களை வீடியோவாக எடுத்து தங்களின் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி இந்தியா வரும் பெண்களிடம், சிலர் அத்துமீறி நடந்துக் கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் கூட தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபருக்கு, இளைஞர் ஒருவர் முத்தமிட்டு, அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரஷ்ய பெண்ணிடம் அத்துமீறல்:
இந்நிலையில், தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார். இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்கில் ரஷ்ய பெண்ணிடம் ஒருவர் அத்துமீறி உள்ளார். டெல்லியைச் சேர்ந்த இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, பெட்ரோல் பங்கில் நின்றுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு ஊழியர் பெண்ணிடம் அத்துமீறி உள்ளார். அதாவது, ரஷ்ய பெண்ணை மூன்று முறை தகாத முறையில் தொட்டு இருக்கிறார். இதனால், அந்த இளைஞர், ஊழியரிடம் சண்டை போட்டுள்ளார். அந்த ஊழியர் ”நான் வேண்டுமென்றே தொடவில்லை” என்று வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால், இருவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் சென்றுக் கொண்டிருந்தது. போலீசாரிடம் புகார் அளிக்கிறோம் என்று அந்த பெண் கூறுவது போல அந்த வீடியோவில் உள்ளது.
Harrasment kalesh (Context in the Video) pic.twitter.com/hvI0qnRsfh
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 18, 2023
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரச்சினை குறித்து விசாரித்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அந்த ஊழியர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை அடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் விக்டோரியா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது நண்பர் டெல்லியில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ரஷ்ய பெண் விக்டோரியா, கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெய்ப்பூர் வந்திருந்தார் இந்நிலையில், தான் இன்று ரஷ்ய பெண்ணிடம் பெட்ரோல் பங்க் ஊழியர் அத்துமீறி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















