மேலும் அறிய

Crime: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  ரவுடியை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வெட்டிய கும்பல் - நெய்வேலியில் பரபரப்பு

இரவில் 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் தூங்கி இருந்த வீரமணியை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வீட்டின் அருகே சரமாரியாக வெட்டி உள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி (30) வட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வீரமணி (வயது 36). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளன. இவரது மனைவி செல்வி கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.
 
 இந்த நிலையில் வீரமணி மற்றும் அவரது தாய் கலியம்மாள் இரண்டு பேரும் வட்டம் 30-ல்  வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரமணி நேற்று இரவு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரவு 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் தூங்கி வீரமணியை கட்டிலோடு தூக்கிக்கொண்டு வீட்டின் அருகே சரமாரியாக வெட்டி உள்ளனர். சத்தம் கேட்ட  கலியம்மாள் கூச்சலிட்டதால்  மர்ம நபர்கள் வீரமணியை விட்டுவிட்டு ஓடி சென்றனர். இதில் வீரமணி பலத்த காயம் ஏற்பட்டு அவரை நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
 வீரமணியை பரிசோதித்த  மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார். பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீரமணி மீது நெய்வேலி பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை, என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் நெய்வேலி போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாவார்.
 
வீரமணி மகன் சிவக்குமார் இவரை கடந்த இரண்டு வருடம் முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். அந்த கும்பல் தான் வீரமணியை கொலை செய்தார்களா? இல்லை  வீரமணியை   முன்விராத காரணத்தால் வெட்டி கொலை செய்தார்களா என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.நெய்வேலியில் ரவுடி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

பத்திரிகையாளர் என்றால் பரமாத்மா கிடையாது- பார்த்து நடந்து கொள்ளுங்கள்!! மீண்டும் பத்திரிகையாளர்களை சீண்டிய சீமான்.

கடலூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கடல் தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு‌ வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல் தீபன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சீன கப்பல் இலங்கை வருகை குறித்த விவகாரம் இந்தியாவால் எதிர்க்கவோ, தடுக்கவும் முடியவில்லை இலங்கை இந்தியாவுடன் நட்பு இருப்பது போல காட்டுமே தவிர பௌத்தர்கள் என்ற முறையில் சீனாவின் பக்கமே நிற்கும். இது இந்தியாவிற்கு பேராபத்தானது. இலங்கைக்கு இந்தியா ஆயுதம் பயிற்சி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று  அரசு கூறியிருக்கும் நிலையில் அரசு மதுக்கடைகள் திறந்து விற்பனை செய்வதை எவ்வாறு ஏற்பது என்றும்,
அரசு சார்ந்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் மது தயாரிக்கின்ற சூழலில் அரசு இது போன்ற கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.

ஆந்திரா அரசு கொற்றலயாற்றில் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதி இருப்பதை சீமான் வரவேற்பதாக கூறினார். ஆனால் அதானி துறைமுகம் கட்டுகிறேன் என பெரிய மதில் சுவர் கட்டி ஆற்றை தண்ணீர் போகாமல் தடுத்ததை பார்த்தீர்களா ஆய்வு செய்தீர்களா? முதலில் எதை செய்யாமல் அவருக்கு கடிதம் எழுதி என்ன பயன் வரப்போகிறது.

 பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறியதற்கு பதில் அளித்த சீமான் கச்சத்தீவை மீட்க வேண்டும் என நான் தான் குரல் கொடுக்க வேண்டும். அதனை அண்ணாமலை தான் மீட்க வேண்டும். அவரிடம்  அதிகாரம் அனைத்தும் உள்ளது குரல் கொடுப்பேன் என அண்ணாமலை கூறுவது அவர்  டப்பிங் ஆர்டிஸ்ட்டா, குரல் கொடுப்பேன் குரல் கொடுப்பேன் என்று கூறுவதற்கு, பத்திரிகையாளர் மண்டையை உடைத்து விடுவேன் என்று கூறியிருப்பது பேசுபொருளாகிய நிலையில் அது குறித்த கேள்விக்கு
பத்திரிக்கையில் சேர்ந்துவிட்டால் பரமாத்மா கிடையாது பார்த்து நடந்து கொள்ளுங்கள். சரியான முறையில் கேள்வியை கேட்க வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: 25 வயது பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த கொடூரம்!
மயிலாடுதுறையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: 25 வயது பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த கொடூரம்!
"பள்ளிக்கு போகவே பயமா இருக்கு!" - தலைமையாசிரியர் கெடுபிடியால் மண்ணெண்ணெய் குடித்த 12-ஆம் வகுப்பு மாணவி...
₹14.50 கோடி தாய்லாந்து கஞ்சா கடத்தல்: சென்னையில் பெண் கைது! சர்வதேச கும்பலுடன் தொடர்பா?
₹14.50 கோடி தாய்லாந்து கஞ்சா கடத்தல்: சென்னையில் பெண் கைது! சர்வதேச கும்பலுடன் தொடர்பா?
மயிலாடுதுறையில் 61 வயது மூதாட்டி உட்பட 40 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்... எஸ்.பி அதிரடி..!
மயிலாடுதுறையில் 61 வயது மூதாட்டி உட்பட 40 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்... எஸ்.பி அதிரடி..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Mitsubishi Pajero Launch: ஃபார்ச்சூனருக்கு பேக்-அப்-ஆ.?! புதிய அவதாரத்தில் வரும் 5-ம் தலைமுறை மிட்சுபிஷி பஜெரோ; லாஞ்ச் எப்போ.?
ஃபார்ச்சூனருக்கு பேக்-அப்-ஆ.?! புதிய அவதாரத்தில் வரும் 5-ம் தலைமுறை மிட்சுபிஷி பஜெரோ; லாஞ்ச் எப்போ.?
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
Embed widget