மேலும் அறிய

காதல் கேட்குதா? - ஸ்கெட்ச் போட்ட பெண்ணின் குடும்பம்.. கொலை செய்யப்பட்ட இளம் ஜோடி!

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தம்பதியினர் இருவரும் காணாமல் போயினர். உடனடியாக குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சோனு மற்றும் நவீனை கண்டுபிடிக்க முடியவில்லை.

குஜராத்தில் காணாமல் போன இளம் தம்பதியினர் வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக இருவரும் சொந்த குடும்பத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த சோனு ரபாரி என 19 வயது பெண்ணும், நவீன் ஜிவாபாய் ரபாரி என்ற 21 வயது இளைஞரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இப்படியான நிலையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தம்பதியினர் இருவரும் காணாமல் போயினர். உடனடியாக குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சோனு மற்றும் நவீனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நகாத்ரானா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் போலீசாரின் சந்தேக பார்வை இளம்பெண் சோனு குடும்பத்தார் மீது திரும்பியது. புகாரிலும், போலீசார் நடத்திய விசாரணையிலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு சோனு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் இருவரையும் குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்து விட்டதாக அப்பெண்ணின் தந்தை சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதாவது நவீனும் சோனுவும் காதலித்து திருமணம் செய்தது பெண்ணின் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏற்கனவே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் நவீனுடனான பந்தத்தை கைவிட வேண்டும் என தொடர்ச்சியாக சோனு தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சோனும், நவீனும் தங்கள் காதல் வாழ்க்கையில் உறுதியாக இருந்துள்ளனர். 

இப்படியான நிலையில் இருவரின் முடிவால் கடும் கோபத்தில் இருந்த சோனுவின் குடும்பம் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி சம்பவ நாளில் சோனுவின் தந்தையும், அவரது மருமகனும் சோனு மற்றும் நவீனை அழைத்துக் கொண்டு கம்பாலா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு பைக்கில் அழைத்துச் சென்றனர். அங்கு சோனுவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்தனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். 

இதனையடுத்து இருவரின் உடல்களையும் அருகிலுள்ள கிணற்றில் வீசி இந்த கொலையை சோனு குடும்பத்தினர் மூடி மறைத்துள்ளனர். இந்த தகவல்கள் அடிப்படையில் சோனுவின் தந்தை, தாய், மருமகன் மற்றும் சகோதரர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தீயணைப்புப் படை மற்றும் தடயவியல் துறையினருடன்  இணைந்து கிணற்றில் இருந்து சோனு மற்றும் நவீன் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget