மேலும் அறிய

Dowry Death : வரதட்சணையால் தற்கொலை செய்துகொண்ட மூன்று சகோதரிகள் : நெஞ்சை உலுக்கும் புதிய தகவல்..

குழந்தை திருமணம் செய்து கொடுக்கப்பட்ட மூன்று சகோதரிகளும் தங்கள் படிப்பைத் தொடர்ந்துள்ளனர். சொந்தக் காலில் நிற்க விரும்பியவர்களை இவர்களது கணவர்கள் குடித்துவிட்டு தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ராஜஸ்தானில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட மூன்று சகோதரிகள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் மூவரும் படிப்பில் சிறந்து விளங்கியவர்கள் எனும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நம் நாட்டில் பெண்களின் கல்வி விழுக்காடு, வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை என ஒருபக்கம் பெண்கள் சமூகம் வளர்ச்சியடைந்து வந்தாலும், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், குறிப்பாக, குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமைகள் ஆகியவை ஓய்ந்தபாடில்லை.

ராஜஸ்தான் சகோதரிகள்

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டம், டுடு நகரில் மூன்று பெண்கள், அவர்களது இரண்டு குழந்தைகளின் சடலங்கள் முன்னதாக கிணற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் மூவரும், கலு மீனா, மம்தா மீனா, கமலேஷ் மீனா ஆகிய மூன்று சகோதரிகள் என்றும், குழந்தைகள் இருவரும் கலு தேவியின் குழந்தைகள் என்பதும், மம்தா, கமலேஷ் இருவரும் கர்ப்பிணிகள் என்பதும் கண்டறியப்பட்டது.

குடும்ப வன்முறை

25, 23, 20 வயது நிரம்பிய இந்த மூன்று சகோதரிகளும் மே 25-ஆம் தேதி காணாமல் போன நிலையில், இவர்கள் குறித்த விசாரணையில், மூன்று சகோதரிகளும் ஒரே குடும்பத்தில் திருமணமாகிச் சென்றவர்கள் என்பதும், மூவரும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் மூவரும் நாள்தோறும் வரதட்சணைகோரி தங்கள் குடும்பத்தாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மூவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், மூவரின் கணவர்களும், மாமியாரும், கணவர்களின் சகோதரியும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

படிப்பில் சிறந்து விளங்கியவர்கள்

இந்த மூன்று சகோதரிகளும் குழந்தைத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட நிலையில், மூவரும் சொந்தக் காலில் நிற்க விரும்பி, தங்கள் படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளனர்.

மூவரும் பிரியாமல் இருக்க ஒரே குடும்பத்தில் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட நிலையில், இவர்களது கணவர்கள் நரசிங், ஜெகதீஷ், முகேஷ் மூவரும் குடித்து விட்டு வந்து நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மேலும், படிப்பில் சிறந்து விளங்கிய மூவரையும் படிப்பை விட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபடும்படியும் வற்புறுத்தி துன்புறுத்தியுள்ளனர். 

மூவரில், திருமணத்துக்கு பின் படிப்பைத் தொடர்ந்து மம்தா, அரசு அதிகாரியாக விரும்பினார். மேலும், அவர் 12ஆம் வகுப்பில் 84 % மதிப்பெண்களை பெற்றிருந்தார். கலுதேவி பிஏ படிப்பின் இறுதி ஆண்டு படித்து வந்தார். அதேபோல இளைய சகோதரி கமலேஷ் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

5 ஆண்டு கால சித்திரவதை

இந்நிலையில், இவர்கள் மூவரும் சுமார் ஐந்து ஆண்டு கால சித்திரவதையைத் தொடர்ந்து மனம் நொந்து தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய குற்றப் பிரிவின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் அதிக வரதட்சணைக் கொலைகள் நடக்கும் முதல் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான் இடம்பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தரவுகளின்படி இந்தியாவில் வரதட்சணை தொடர்பான பிரச்சினைகளால் ஒவ்வொரு நாளும் 19 பெண்கள் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டில் மொத்தம் 6,966 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 7,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜஸ்தானில் மட்டும் 479 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget