மேலும் அறிய

பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை.. கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக பொதுமக்கள் நிகழ்த்திய கொடூரம்..

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்ததற்காக 46 வயது பழங்குடியினரை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

சாதியத் தாக்குதல்

சூர்சாகரில் உள்ள போமியாஜி கி காதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிடிஐ வெளியிட்டுள்ள தகவல்களின் படி, குற்றம் சாட்டப்பட்டவர், கிஷன்லால் பீல் என்ற நபர் மீது சாதிய அவதூறு காரணமாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

மேலும் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை என்று அவரது சகோதரர் அசோக் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை.. கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக பொதுமக்கள் நிகழ்த்திய கொடூரம்..

மூவர் கைது

இந்த சம்பவத்தை தொடர்ந்து இதுவரை, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷகீல், நசீர் மற்றும் பப்லு  என்னும் மூவர் அவரை அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Twitter Official Badge: இனி போலி கணக்குக்கு ’பாய்’ ’பாய்’..ட்விட்டர் பக்கத்தில் அடுத்த ட்விஸ்ட்.. அதிகாரபூர்வமாக வந்த புதிய அப்டேட்.!

உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என சூர்சாகர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ., கவுதம் தோடசரா தெரிவித்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பீலின் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், அத்துடன் நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை.. கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக பொதுமக்கள் நிகழ்த்திய கொடூரம்..

சகோதரர் தகவல்

"பிரேத பரிசோதனை செய்து உடலை இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி வருகிறோம்” என்று டோட்டாசரா கூறினார். கைது செய்யப்பட்ட மூவர் உட்பட உள்ளூர்வாசிகள் சிலர் உள்ளூரில் நிறுவப்பட்ட குழாய் கிணற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். அதில் பம்ப் ஒன்றையும் பொருத்தி, மற்றவர்களை பயன்படுத்த விடுவதில்லை என்று கூறியுள்ளார்.

"ஞாயிற்றுக்கிழமை இரவு, கிஷன்லால் தண்ணீருக்காக குழாய்க் கிணற்றிற்குச் சென்றிருந்தார், ஆனால் இந்த மக்கள் அவரைத் தள்ளிவிட்டு, அவரை சாதி ரீதியாக அவதூறு செய்து அடித்தனர்" என்று அசோக் குற்றம் சாட்டினார். அவர் வீடு திரும்பிய உடனேயே, நசீர், ஷகீல், பப்லு உள்ளிட்ட சிலர் எங்கள் வீட்டைத் தாக்கி பீல் மற்றும் அவரது மகனை கம்பிகள் மற்றும் கட்டைகளால் தாக்கினர் என்று அசோக் மேலும் காவல்துறையினரிடம் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget