மேலும் அறிய

Crime: ராஜஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு விபத்து.. ஒன்றரை வயது குழந்தை உள்பட 15 பேர் உயிரிழப்பு!

விபத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் சோமு நகரை சேர்ந்த சிலர் சொகுசு கார் ஒன்றில் அதிவேகமாக கண்டேலா பகுதியை நோக்கி சென்றுள்ளது. 

அப்போது, அந்த சொகுசு கார் பல்சானா- கண்டேலா தேசிய நெடுஞ்சாலையில் மாஜி சாஹப் கி தானி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது. காரை ஓட்டிவந்த ஓட்டுனர் காரை கட்டுப்படுத்த முயற்சித்தும், கார் கட்டுப்பாட்டை இழந்து, முதலில் எதிரே வந்த பைக் மீது மோதியது. தொடர்ந்து வேகமாக வந்த லாரி மீதும் மோதி விபத்துகுள்ளானது. 

இந்த விபத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த 7 பேர் உள்பட மொத்தமாக 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதும் சிகிச்சையின்போதும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

விபத்து குறித்து நெடுஞ்சாலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களுடன் துரிதமான செயல்பட்டு விபத்துகுள்ளானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு சம்பவம்:

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் சாலையில் மற்றொரு கொடூர சாலை விபத்து ஒன்று நிழந்துள்ளது. இதிலும் கார் மற்றும் லாரி நேருக்குநேர் மோதிக்கொண்டத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்து பிகானரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

லாரி டிரைவர் தப்பியோட்டம்:

ஹனுமன்கர் மெகா நெடுஞ்சாலையில் உள்ள பிஸ்ராசர் கிராமத்தில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து முக்கிய காரணமாக இருந்த லாடி டிரைவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். 

இந்த விபத்தானது ராவத்சர்- சர்தர்ஷாஹர் நெடுஞ்சாலையில் பிஸ்ராசர் கிராமத்திற்கு அருகே சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பல்லு காவல் நிலைய பொறுப்பாளர் கோபி ராம் தெரிவித்தார். 

இறந்தவர்கள் ராஜூ மேக்வால், நரேஷ் குமார், தனராம், பப்லு மற்றும் முரளி சர்மா என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget