Crime: 5 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சகோதரர், தாத்தா - புனேவில் கொடூர சம்பவம்
சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தினரே கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பீகாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இந்தக் குடும்பத்தில் இருக்கும் சிறுமிக்கு பள்ளியில் பாலியல் ரீதியான தொடுதல் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பள்ளி ஆசிரியரிடம் தனக்கு நடைபெற்று வரும் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

அதன்படி 2017ஆம் ஆண்டு முதல் அந்தச் சிறுமியை அவருடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு அச்சிறுமியை அவருடைய சகோதரரும் பாலியல் ரிதியாக வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் தவிர அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா ஆகியோரும் பாலியல் ரீதியாக சீண்டல் செய்துள்ளதாக அச்சிறுமி புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியாக நடைபெற்றுள்ளது. இவர்கள் ஒருவர் செய்த பாலியல் வன்கொடுமை மற்ற நபர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிறுமியின் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அவருடைய தந்தை(45) மட்டும் சகோதரர் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா மீது ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே 5 ஆண்டுளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:நடு இரவில் எரிந்த வீடு! கதறி கருகிய 4 பேர்! அமைதியாய் வேடிக்கை பார்த்த முதியவர்! ஷாக் சம்பவம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
ட்ரெண்டிங் செய்திகள்





















