மேலும் அறிய

புதுக்கோட்டையில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளகாதலியுடன் ஏற்பட்ட பணம் பிரச்சனையால் பெண்ணை கொலை செய்த வழக்கில் 3 பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது மகிளா நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே விளானூர் பகுதியை சேர்ந்த பால்சாமியின் மனைவி பஞ்சவர்ணம் (47). இவரது கணவர் இறந்து விட்டார். பஞ்சவர்ணத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாருக்கும் (48) பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் பஞ்சவர்ணத்திடம் சிவக்குமார் ஒரு லட்சம் பணம் வாங்கி உள்ளார். இந்த பணத்தை பஞ்சவர்ணம் திருப்பி கேட்ட போது அவர் கொடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார். இதனால் அவரிடம் பணத்தை கேட்டு பஞ்சவர்ணம் பிரச்னை செய்துள்ளார். இது தொடர்பாக தன்னுடன் சென்னையில் ஓட்டலில் வேலை பார்த்த ஆவுடையார் கோவில் அருகே உள்ள குமுளூரை சேர்ந்த காளிமுத்து (40), மணிப்பூரை சேர்ந்த லலிம்பாய் (30) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பஞ்சவர்ணத்திடம் காளிமுத்து பழக்கம் ஏற்படுத்தி பணத்தை திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்வது போல சம்பவத்தன்று பஞ்சவர்ணத்தை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வடகீழ்குடி பகுதியில் ஆற்றங்கரையோரம் காளிமுத்து அழைத்து சென்றார்.
 
அங்கு பஞ்சவர்ணத்தை காளிமுத்து, சிவக்குமார், லலிம்பாய் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து புதைத்தனர். மேலும் பஞ்சவர்ணத்திடம் இருந்த 7.5 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதற்கிடையில் தனது தாய் பஞ்சவர்ணத்தை காணவில்லை என அவரது மகன் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது மேற்கண்ட தகவல் காவல்துறைக்கு  தெரியவந்தது. இதையடுத்து காளிமுத்து, சிவக்குமார், லலிம்பாய் ஆகியோரை கைது செய்தனர்.
 

புதுக்கோட்டையில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
 
இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்துவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், சிவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், லலிம்பாய்க்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
 
இதை தொடர்ந்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்திய பஞ்சவர்ணத்தின் கொலை வழக்கில் கைதான காளிமுத்துவிடம் காவல்துறை விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 6-1-2018 அன்று ஆவுடையார்கோவில் அருகே குமுளூர் கிராமத்தில் வசிக்கும் நபரான காளிமுத்துவின் மனைவி கனகம்பாளின் தலையை துண்டித்து கொலை செய்து, அவரது உடலை எரித்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார்.
 

புதுக்கோட்டையில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
 
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் கொலையாளி காளிமுத்துவை கைது செய்தனர்.  நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தந்தையை குமுளூரில் வசிக்கும் காளிமுத்து அவமானப்படுத்தியதால், அதற்கு பழி தீர்க்க அவரை கொலை செய்ய சென்ற இடத்தில் அவர் இல்லாததால் அவரது மனைவியான கனகம்பாளை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கும் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா  தீர்ப்பு வழங்கினார்.  இதில் காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும், தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், சிறையில் இருக்கும் காலத்தில் 18 மாதங்களில் மாதத்தில் 5 நாட்கள் தனிமை சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதனால் 2 கொலை வழக்கில் காளிமுத்துவுக்கு 3 ஆயுள் தண்டனையும், 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Embed widget