மேலும் அறிய

Temple Entry : பட்டியலினத்தவருக்கு கோயில் நுழைவு மறுப்பு.. கட்டுப்பாட்டை முறியடித்த எஸ்.பி, மாவட்ட ஆட்சியர்.. 3 தலைமுறைகளில் நடக்காத சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் கோயிலுக்குள் தங்களை அனுமதிப்பதில்லை என்ற புகாரை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பட்டியிலின மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

தீண்டாமை ஒரு பாவச்செயல்..! தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..! தீண்டாமை ஒரு தண்டனைக்குரிய செயல் என ஏட்டில் இருந்தாலும், பலரின் மனதிற்குள் இன்னும் அது ஆழப்பதியவில்லை என்பதே உண்மை. அதற்கு சான்றாகவே அவ்வப்போது நடைபெறும் சாதிய கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் மனதை உலுக்கும் விதமாக அமைகின்றன. அந்த வகையில் தான், புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு:

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வந்த அந்த மக்கள் முன்னெடுத்த  நீண்டகால,  போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் வேங்கை வயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம்:

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் சிறுவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில், நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

திட்டமிட்டு சதிச்செயல்?

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என புகார்:

இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கை வயல் பகுதிக்கு வந்தனர். அப்போது, குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக ஊராட்சி தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியிலன மக்களிடம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, பேசிய பட்டியிலன மக்கள் அங்குள்ள அய்யனார் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்படுவதிவில்லை என புகாரளித்துள்ளனர். இதுதொடர்பாக, ஊர்மக்களிடம் விசாரித்தபோது சாதிய பாகுபாடு எதுவும் நாங்கள் காட்டுவதில்லை எனவும், பட்டியிலன மக்கள் தான் கோயிலுக்குள் வருவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அதிரடி:

இதையடுத்து கோயிலின் சாவியை கேட்டு பெற்ற மாவட்ட ஆட்சியர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். இதுதொடர்பாக பேசிய பட்டியலின பெண், கடந்த 3 தலைமுறைகளாக வேங்கை வயல் கிராமத்தில் நாங்கள் வசித்து வருவதாகவும், ஆனால் இப்போது தான் முதல்முறையாக இந்த கோயிலுக்குள் வந்து இருப்பதாகவும் கூறினார். எந்த விதத்தில் எங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அவர்கள் கருதுகின்றனர் என புரியவில்லை. நாங்களும் படித்து சமூகத்தில் முன்னேற தொடங்கிவிட்டோம் என வேதனையுடன் தெரிவித்தார்.

இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அவை தொடர்பாகவும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மது போதையில் தகராறு ; கணவனின் சந்தேகத்தால் மனைவி எடுத்த கொடூர முடிவு !!
மது போதையில் தகராறு ; கணவனின் சந்தேகத்தால் மனைவி எடுத்த கொடூர முடிவு !!
வரதட்சணை கொடுமை ; பெண் குழந்தை பிறந்ததால், மனைவியையும் , மாமனாரையும் கொடூரமாக கொன்ற மருமகன் !!
வரதட்சணை கொடுமை ; பெண் குழந்தை பிறந்ததால், மனைவியையும் , மாமனாரையும் கொடூரமாக கொன்ற மருமகன் !!
"சாமி சிலைகளோடு வந்த சொகுசு கார்.." - பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய 2 ஐம்பொன் சிலைகள்; பின்னணி என்ன?
Vilathikulam Case: 2 கொலை, 3 பாலியல் வன்கொடுமை, 33 வழக்குகள்- விளாத்திகுளம் குற்றவாளியின் கொடூர, தந்திர பின்னணி!
Vilathikulam Case: 2 கொலை, 3 பாலியல் வன்கொடுமை, 33 வழக்குகள்- விளாத்திகுளம் குற்றவாளியின் கொடூர, தந்திர பின்னணி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance seat allocation : பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான லிஸ்ட்
பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான இறுதி லிஸ்ட்
TN Election: ”ஆமா, அதிமுக தொகுதிகளை தான் கேட்கிறோம்” BJP ஓபன் டாக், தாமரை Vs இரட்டை இலை? சிக்குவது யார்?
TN Election: ”ஆமா, அதிமுக தொகுதிகளை தான் கேட்கிறோம்” BJP ஓபன் டாக், தாமரை Vs இரட்டை இலை? சிக்குவது யார்?
Iran USA War: ”ட்ரம்ப் நாம சொன்னா கேப்பாரா, இனி ஒன்னுமே செய்ய முடியாது” - இலக்கை சொன்ன இஸ்ரேல் பிரதமர்
Iran USA War: ”ட்ரம்ப் நாம சொன்னா கேப்பாரா, இனி ஒன்னுமே செய்ய முடியாது” - இலக்கை சொன்ன இஸ்ரேல் பிரதமர்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
Hormuz Sea Internet Cable: லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
Crude Oil Price: ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Embed widget