மேலும் அறிய

புதுச்சேரியில் அதிர்ச்சி! மனைவியுடன் பேசியதால் நண்பனை கொடூரமாக கொலை செய்த கணவன்!

புதுச்சேரி : மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், வாலிபரை வெட்டி கொலை செய்த கணவன்.

புதுச்சேரி: மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், வாலிபரை வெட்டி கொலை செய்த நண்பர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசிய நபரை கொலை செய்த கணவன்

புதுச்சேரி மாநிலம் உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது, வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் புகாரின்பேரில், கண்காணிப்பாளர் ஸ்ருதி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கொலை செய்யப்பட்ட வாலிபர், உழவர்கரை பகுதியை சேர்ந்த சந்துரு, (வயது 24) என்பதும், நைனார்மண்டபத்தில் இறைச்சி கடையில் கோழிகளை ஏற்றி, இறங்கும் லோடுமேனாக வேலை செய்ததும் தெரியவந்தது. வாலிபர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் 'ரோஜர்' வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபருடன் வேலை செய்த நைனார்மண்டபம் வெங்கடேஷ் என்பரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இதற்கிடையே, திருமணத்திற்கு பிறகு வெங்கடேஷ் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தனது மனைவி காவியா வீட்டிலேயே கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

மது அருந்த அழைத்து கொலை

இந்நிலையில், வெங்கடேஷ் வீட்டிற்கு சந்துரு அடிக்கடி சென்ற போது, அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதையறிந்த வெங்கடேஷ், இனி தனது மனைவியிடம் பேச வேண்டாம் என சந்துருவை கண்டித்துள்ளார். அதன் பிறகும் சந்துரு, தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது நண்பர்கள் உதவியுடன் சந்துருவை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முன்தினம் மனைவி, திருசெந்துார் கோவிலுக்கு சென்றிருந்தபோது, தனது வீட்டிற்கு மது அருந்த சந்துருவை அழைத்தார்.

வெங்கடேஷ் வீட்டிற்கு சென்ற சந்துருவுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். போதை ஏறியதும், வெங்கடேஷ் தனது நண்பர்களான வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த சரண், ராஜேஷ், இணைந்து சந்துருவை சராமாரியாக வெட்டி கொலை செய்தார். பின், சந்துரு உடலை கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்

சந்துருவை, நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அடித்து கொலை செய்தனர். சம்பவம் நடந்தது பகல் நேரம் என்பதால், உடலை வெளியே கொண்டு செல்லாமல், வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர். பின், சாவகாசமாக வீட்டில் படிந்திருந்த ரத்த கரைகளை பினாயில் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். தொடர்ந்து மூவரும் வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

மீண்டும் நள்ளிரவு வீட்டிற்கு வந்த மூவரும், வீட்டில் மறைத்து வைத்திருந்த சந்துரு உடலை நேற்று அதிகாலை 4 மணி அளவில் 14 மணி நேரம் கழித்து உப்பளம், விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேஷ், சரண், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget