மேலும் அறிய

புதுச்சேரியில் அதிர்ச்சி! மனைவியுடன் பேசியதால் நண்பனை கொடூரமாக கொலை செய்த கணவன்!

புதுச்சேரி : மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், வாலிபரை வெட்டி கொலை செய்த கணவன்.

புதுச்சேரி: மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், வாலிபரை வெட்டி கொலை செய்த நண்பர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசிய நபரை கொலை செய்த கணவன்

புதுச்சேரி மாநிலம் உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது, வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் புகாரின்பேரில், கண்காணிப்பாளர் ஸ்ருதி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கொலை செய்யப்பட்ட வாலிபர், உழவர்கரை பகுதியை சேர்ந்த சந்துரு, (வயது 24) என்பதும், நைனார்மண்டபத்தில் இறைச்சி கடையில் கோழிகளை ஏற்றி, இறங்கும் லோடுமேனாக வேலை செய்ததும் தெரியவந்தது. வாலிபர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் 'ரோஜர்' வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபருடன் வேலை செய்த நைனார்மண்டபம் வெங்கடேஷ் என்பரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இதற்கிடையே, திருமணத்திற்கு பிறகு வெங்கடேஷ் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தனது மனைவி காவியா வீட்டிலேயே கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

மது அருந்த அழைத்து கொலை

இந்நிலையில், வெங்கடேஷ் வீட்டிற்கு சந்துரு அடிக்கடி சென்ற போது, அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதையறிந்த வெங்கடேஷ், இனி தனது மனைவியிடம் பேச வேண்டாம் என சந்துருவை கண்டித்துள்ளார். அதன் பிறகும் சந்துரு, தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது நண்பர்கள் உதவியுடன் சந்துருவை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முன்தினம் மனைவி, திருசெந்துார் கோவிலுக்கு சென்றிருந்தபோது, தனது வீட்டிற்கு மது அருந்த சந்துருவை அழைத்தார்.

வெங்கடேஷ் வீட்டிற்கு சென்ற சந்துருவுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். போதை ஏறியதும், வெங்கடேஷ் தனது நண்பர்களான வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த சரண், ராஜேஷ், இணைந்து சந்துருவை சராமாரியாக வெட்டி கொலை செய்தார். பின், சந்துரு உடலை கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்

சந்துருவை, நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அடித்து கொலை செய்தனர். சம்பவம் நடந்தது பகல் நேரம் என்பதால், உடலை வெளியே கொண்டு செல்லாமல், வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர். பின், சாவகாசமாக வீட்டில் படிந்திருந்த ரத்த கரைகளை பினாயில் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். தொடர்ந்து மூவரும் வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

மீண்டும் நள்ளிரவு வீட்டிற்கு வந்த மூவரும், வீட்டில் மறைத்து வைத்திருந்த சந்துரு உடலை நேற்று அதிகாலை 4 மணி அளவில் 14 மணி நேரம் கழித்து உப்பளம், விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேஷ், சரண், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Embed widget