மேலும் அறிய

காரைக்கால் சாலையோர வியாபாரிகளுக்கு அதிரடி எச்சரிக்கை! தள்ளுவண்டிகளை உடனே அகற்றாவிட்டால் பறிமுதல்!

சாலையோர வியாபாரிகளும், வியாபார நேரம் முடிந்தவுடன், தள்ளுவண்டி கடைகளைச் சாலையோரங்களில் விட்டுச் செல்லாமல் அப்புறப்படுத்த வேண்டும் என காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 'பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா' (PMSVANidhi) திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றுப் பயனடைந்துள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளும், வியாபார நேரம் முடிந்தவுடன் தங்களது தள்ளுவண்டி கடைகளைச் சாலையோரங்களில் விட்டுச் செல்லாமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மீறுவோரின் தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் திட்ட அதிகாரி மற்றும் நகராட்சி ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஸ்வநிதி திட்டப் பயனாளிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா (PMSVANidhi), கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் மீண்டும் தொழிலைத் தொடங்குவதற்கு உதவியாகச் சிறப்புக் கடனுதவிகளை வழங்குகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பயன் பெற்று, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், காரைக்கால் நகராட்சி ஆணையர் மற்றும் திட்ட அதிகாரி (PMSVANidhi) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் சில முக்கிய விதிமுறைகள் நினைவூட்டப்பட்டுள்ளன.

பாரதியார் வீதி முதல் கீழகாசாகுடி எல்லை முடியும் வரை சாலையோர கடை நடத்துபவர்களுக்கு எச்சரிக்கை

குறிப்பாக, காரைக்காலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான பாரதியார் வீதி எல்லை முதல் கீழகாசாகுடி எல்லை முடிவு வரை சாலையோரத்தில் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு இந்த உத்தரவு மிக முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளும்.

* பொதுமக்களுக்கு இடையூறு கூடாது: சாலையோர வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளை அமைக்கும்போதும், வியாபாரம் செய்யும்போதும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாத வகையில் கடைகளை நடத்த வேண்டும். பொதுச் சாலையை ஆக்கிரமித்து நடக்கும் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

*வியாபாரம் முடிந்தவுடன் அப்புறப்படுத்துதல் கட்டாயம்: ஒவ்வொரு நாளும் வியாபார நேரம் முடிந்தவுடன், தள்ளுவண்டிக் கடை உரிமையாளர்கள் தங்கள் வண்டிகளையும், கடைப் பொருட்களையும் அங்கேயே விட்டுச் செல்லாமல், உடனடியாக அந்த இடத்திலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

விதிமீறினால் பறிமுதல் நடவடிக்கை உறுதி

நகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவுறுத்தலை மீறி செயல்படும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வியாபார நேரம் முடிந்து தங்களது தள்ளுவண்டிகளை அந்தந்த இடத்திலேயே விட்டுச்சென்றால், தங்களது தள்ளுவண்டிகள் நகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகின்றது."

எனவே, சாலையோர வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காத வகையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு தங்கள் தள்ளுவண்டிகளை உடனடியாக அகற்றி, நகராட்சியின் விதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பொதுநலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் அன்றாட நடமாட்டத்தைச் சுலபமாக்கவும் உதவும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகளைக் கடைபிடிக்க வேண்டுகோள்

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் நோக்கமே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுதான். எனினும், அரசு வழங்கும் இந்தச் சலுகையை அனுபவிக்கும் அதே வேளையில், நகரின் ஒழுங்குமுறையைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு வியாபாரியின் கடமையாகும். நகராட்சி நிர்வாகத்தின் இந்த கடுமையான எச்சரிக்கையை அனைத்து PMSVANidhi பயனாளிகளும் கவனத்தில் கொண்டு, எந்தவிதப் புகாருக்கும் இடமளிக்காதவாறு செயல்பட வேண்டும் என காரைக்கால் நகராட்சி ஆணையர் மற்றும் திட்ட அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்கள். மீறுவோர் மீது கடுமையான பறிமுதல் நடவடிக்கை பாயும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget