மேலும் அறிய

கரூர்: ஆசிரியர் மீது பொய் வழக்கா? - மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியின் முன் போராட்டம்

பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ்.பி. பேச்சுவார்த்தை  நடத்தினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

குளித்தலை அடுத்த தோகைமலை பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக மருதை (59) பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகாதவர். இப்பள்ளியில் 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர், மாணவிகளிடம் அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.


கரூர்: ஆசிரியர் மீது பொய் வழக்கா? - மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியின் முன் போராட்டம்

அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் மாணவிகளின் நிலையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மேரி லாரா சேசுராஜ் விசாரணை செய்து,  குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசியிடம் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவியல் ஆசிரியர் மருதையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் போராட்டம்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்டார். ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பேச்சு வார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குண்ணாகவுண்டன் பட்டியைச் சேர்ந்தர் மருதை (59). இவர் தோகைமலை அருகேயுள்ள பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்  அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 


கரூர்: ஆசிரியர் மீது பொய் வழக்கா? - மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியின் முன் போராட்டம்

இவர் கடந்த சில மாதங்களாக 6 முதல்  8ம் வகுப்பு படிக்கும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாக திட்டி, தவறான நோக்கத்துடன்  அவர்களை உடலை தொட்டதாக புகார் எழுந்ததாகவும், அதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி லாரா அளித்த புகாரின்பேரில் ஆபாசமாக திட்டுதல் மற்றும் போக்சோ (குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் மருதை மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.


கரூர்: ஆசிரியர் மீது பொய் வழக்கா? - மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியின் முன் போராட்டம்

இதுகுறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியரை பொய் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி,  குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாணவ, மாணவிகள்  போராட்டத்தை கைவிட மறுத்தனர்.


கரூர்: ஆசிரியர் மீது பொய் வழக்கா? - மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியின் முன் போராட்டம்

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் மாணவ,  மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ்.பி. பேச்சுவார்த்தை  நடத்தினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

 

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு வழக்கில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அடிப்படையில் ஆசிரியரை போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் தற்போது ஆசிரியருக்காக பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Embed widget