மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூரை சேர்ந்தவர் உமாபார்வதி (28). இவருக்கும் கோட்டையாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகனான கூலித்தொழிலாளி சிலம்பரசன் (33) என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது உமாபார்வதியின் பெற்றோர், வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர். திருமணமான 3 மாதங்களிலேயே சிலம்பரசன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாபார்வதியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு 7 மாத கர்ப்பிணியாக இருந்த உமாபார்வதியிடம், திருமணத்தின் போது தருவதாக கூறிய மேலும் 5 பவுன் நகையை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கேட்டு சிலம்பரசன் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அவரது தந்தை ஏழுமலை, தாய் கலியம்மாள், உறவினர் முனுசாமி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.


வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

இதனால் உமாபார்வதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இதுபற்றி கூறியுள்ளார். உடனே உமாபார்வதியை அவரது தாய் பூமாலை, கோட்டையாம் பாளையத்திற்கு அழைத்து வந்து சிலம்பரசன் மற்றும் அவரது பெற்றோரிடம் தான் செய்ய வேண்டிய சீர்வரிசைகளை உமாபார்வதியின் 9-வது மாத வளைகாப்பின்போது வழங்குவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகும் உமாபார்வதியை சிலம்பரசன் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கடந்த 2014 ஆம் ஆண்டு உமாபார்வதி அதே கிராமத்தில் உள்ள தங்கராஜ் என்பவரின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பூமாலை அளித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், ஏழுமலை, கலியம்மாள், முனுசாமி ஆகியோரை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சிலம்பரசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஏழுமலை, கலியம்மாள், முனுசாமி ஆகிய 3 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிலம்பரசன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget