மேலும் அறிய

கறி வாங்கி காசு தரவில்லை; பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது

புதுச்சேரி: பிரியாணிக்கு கடைக்கு ஆட்டிறைச்சி வாங்கி, ரூ.23 லட்சம் மோசடி செய்த, 'யா மொய்தீன் பிரியாணி' கடை உரிமையாளர் கைது

புதுச்சேரி: பிரியாணிக்கு கடைக்கு ஆட்டிறைச்சி வாங்கி, ரூ.23 லட்சம் மோசடி செய்த, 'யா மொய்தீன் பிரியாணி' கடை உரிமையாளரை புதுச்சேரி ரொட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மூலகுளம், ரங்கா நகரை பகுதியைச் சேர்ந்தவர் போலாசா ( வயது 54 ); இவர் மேட்டுப்பாளையத்தில் 'மாலிக் பாய் மட்டன் சப்ளை கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு தொடர்பு கொண்ட கொசப்பாளையம், டி.ஆர்.நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சேதுராமன் மகன் பாலச்சந்திரன், அவரது மனைவி ரம்யா ஆகியோர், புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் மற்றும் பல இடங்களில் பல்லாவரம் 'யா மொய்தீன் பிரியாணி கடை துவங்க உள்ளதால், ஆட்டிறைச்சி வழங்கும் படி கூறியுள்ளார்.

விழுப்புரத்திலும் பிரியாணி கடை கிளையை துவங்கியுள்ளதாக கூறி, அதற்கும் ஆட்டிறைச்சி வழங்கும்‌ படி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் ஆட்டு இறைச்சி வாங்கியதில், ரூபாய் 23 லட்சம் நிலுவை ஏற்பட்டது.

போலாசா  நிலுவையிலுள்ள பணத்தை கேட்ட போது, தமிழகத்தில் மேலும் சில கிளைகள் திறக்க உள்ளதாகவும், அதற்கும் நீங்கள் தான் ஆட்டு இறைச்சி கொடுக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி, தொடர்ந்து ஆட்டு இறைச்சி கொடுத்து வந்தார். பாலச்சந்திரன் கூறியபடி, சமீபத்தில் புதுச்சேரி அண்ணா சாலையிலும், யா மொய் தீன் பிரியாணி கடை திறக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் நிலுவை தொகையை போன் செய்து கேட்ட போது, பாலச்சந்திரன் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

T.r.நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட போலாசாவிற்கு பாலசந்தரின் பயங்கர மிரட்டல் விடுத்தார். இது குறித்து போலாசா அளித்த புகாரின் பேரில், பாலச்சந்திரன், மனைவி ரம்யா, தந்தை சேதுராமன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பாலச்சந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பிரியாணி கடைக்கு கறி வாங்கி 23 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டம்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டம்..!
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பொதுமக்கள் - மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!
Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’  தயாரான பட்டியல்..!
’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?’ பட்டியல் தயார்..!
Chennai Power Cut: சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில் நாளை (22.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
Sattamum Needhiyum Review : சரவணன் நடித்து ஓடிடியில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்...விமர்சனம் இதோ
Sattamum Needhiyum Review : சரவணன் நடித்து ஓடிடியில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்...விமர்சனம் இதோ
Embed widget