மேலும் அறிய

Pondicherry Police Forgery: டிஜிட்டில் முறையில் லஞ்சம் பெற்ற காவலர்; ஆதாரத்தோடு பிடித்த அதிகாரிகள்..!

Pondicherry Police Forgery: நூதன முறையில் லஞ்சம் பெற்று மாட்டிக்கொண்ட காவல்துறை அதிகாரி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Pondicherry Police Forgery:  

காவல் துறையினர் லஞ்சம் வசூலிப்பதற்கு எதிராக எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் காவல்துறையினர் அதனை விடுவதாக இல்லை. முன்பெல்லாம் லஞ்சத்தை நேரடியாக தாங்களே பெற்று வந்த நிலையில், லஞ்ச தடுப்பு பிரிவின் நடவடிக்கைகள் வேகமெடுத்ததால் காவல் துறையில் சிலர் தாங்கள் லஞ்சம் வசூலிக்கும் முறையை வேறு விதமாக மாற்றிவிட்டனர்.

பொதுவாகவே காவல்துறையினர் லஞ்சம் அதிகம் பெறும் இடங்களில் ஒன்று சாலையில்தான். மெட்ரோ நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் சட்டம் - ஒழுங்கு காவல்துறையினர்தான் போக்குவரத்து காவலர்களைப் போல், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களை சோதனை செய்கின்றனர்.

ஹெல்மெட் போடாத, இன்சுரன்ஸ் இல்லாத அல்லது வேறு எதாவது போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவது வழக்கம்தான். அதேநேரத்தில் காவல் துறையினர் வழக்கு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் பொதுமக்கள் பயந்து விடுவதால், காவல்துறையினருக்கு அபராதம் என்ற பெயரில் லஞ்சத்தை கொடுத்துவிட்டு, நம்மள விட்டா போதும் என அங்கிருந்து தப்பித்துவிடுகின்றனர். 

காவல் துறையினர் சிலர் இப்போதும் வாகனங்களை மறித்து சோதனையிடும்போது லஞ்சம் பெற்றால் அதனை அருகில் தங்களுக்கு வேண்டப்பட்ட நபரை நிறுத்தி வைத்துவிட்டு அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு வா, வண்டி சாவியைத் தருகிறேன் என கூறுவது இன்றைக்கும் ஆங்காங்கு மெட்ரோ நகரங்களில் கூட பார்க்க முடியும். ஆனால் பாண்டிச்சேரியில் இதனை எல்லாம் ஓவர்-டேக் செய்யும் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

அதாவது பாண்டிச்சேரிக்கு கடந்த மே மாதம் 9ஆம் தேதி குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்ற முரளிதரனிடம் ரூபாய் 500 அபராதமாக வசூல் செய்துள்ளது பாண்டி காவல்துறை. அபராதத்தை கூகுள் பே மூலம் செலுத்தி விட்டு வந்திருக்கிறார் முரளிதரன். அபராதத்தை வசூல் செய்துகொண்டு ரசீது தராததால் சந்தேகமடைந்தவர், பாண்டிச்சேரி உயர் காவல் அதிகாரிகளிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த உயர் அதிகாரிகள், கூகுள் பே அக்கவுண்ட் யாருடையது என்பதைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரியையும் கண்டுபிடித்துவிட்டனர். 

இந்நிலையில், லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு துறை ரீதியான நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகிறது பாண்டி காவல். இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆனாலும், இப்போதுதான் வெளிவந்துள்ளதால், பாண்டி மட்டும் இல்லாது தமிழ்நாட்டிலும், இதுதான் பேச்சாக உள்ளது. அதில் சிலர் லஞ்சம் எப்படி எல்லாம் வசூலிக்கிறார்கள் பாருங்களேன் எனவும் இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க என சிலரும்,  என்னதான் லஞ்சம் வாங்கினாலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என ஒரு சிலரும் கூறிவருகிறனர். 

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget