மேலும் அறிய

Pondicherry Police Forgery: டிஜிட்டில் முறையில் லஞ்சம் பெற்ற காவலர்; ஆதாரத்தோடு பிடித்த அதிகாரிகள்..!

Pondicherry Police Forgery: நூதன முறையில் லஞ்சம் பெற்று மாட்டிக்கொண்ட காவல்துறை அதிகாரி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Pondicherry Police Forgery:  

காவல் துறையினர் லஞ்சம் வசூலிப்பதற்கு எதிராக எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் காவல்துறையினர் அதனை விடுவதாக இல்லை. முன்பெல்லாம் லஞ்சத்தை நேரடியாக தாங்களே பெற்று வந்த நிலையில், லஞ்ச தடுப்பு பிரிவின் நடவடிக்கைகள் வேகமெடுத்ததால் காவல் துறையில் சிலர் தாங்கள் லஞ்சம் வசூலிக்கும் முறையை வேறு விதமாக மாற்றிவிட்டனர்.

பொதுவாகவே காவல்துறையினர் லஞ்சம் அதிகம் பெறும் இடங்களில் ஒன்று சாலையில்தான். மெட்ரோ நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் சட்டம் - ஒழுங்கு காவல்துறையினர்தான் போக்குவரத்து காவலர்களைப் போல், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களை சோதனை செய்கின்றனர்.

ஹெல்மெட் போடாத, இன்சுரன்ஸ் இல்லாத அல்லது வேறு எதாவது போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவது வழக்கம்தான். அதேநேரத்தில் காவல் துறையினர் வழக்கு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் பொதுமக்கள் பயந்து விடுவதால், காவல்துறையினருக்கு அபராதம் என்ற பெயரில் லஞ்சத்தை கொடுத்துவிட்டு, நம்மள விட்டா போதும் என அங்கிருந்து தப்பித்துவிடுகின்றனர். 

காவல் துறையினர் சிலர் இப்போதும் வாகனங்களை மறித்து சோதனையிடும்போது லஞ்சம் பெற்றால் அதனை அருகில் தங்களுக்கு வேண்டப்பட்ட நபரை நிறுத்தி வைத்துவிட்டு அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு வா, வண்டி சாவியைத் தருகிறேன் என கூறுவது இன்றைக்கும் ஆங்காங்கு மெட்ரோ நகரங்களில் கூட பார்க்க முடியும். ஆனால் பாண்டிச்சேரியில் இதனை எல்லாம் ஓவர்-டேக் செய்யும் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

அதாவது பாண்டிச்சேரிக்கு கடந்த மே மாதம் 9ஆம் தேதி குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்ற முரளிதரனிடம் ரூபாய் 500 அபராதமாக வசூல் செய்துள்ளது பாண்டி காவல்துறை. அபராதத்தை கூகுள் பே மூலம் செலுத்தி விட்டு வந்திருக்கிறார் முரளிதரன். அபராதத்தை வசூல் செய்துகொண்டு ரசீது தராததால் சந்தேகமடைந்தவர், பாண்டிச்சேரி உயர் காவல் அதிகாரிகளிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த உயர் அதிகாரிகள், கூகுள் பே அக்கவுண்ட் யாருடையது என்பதைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரியையும் கண்டுபிடித்துவிட்டனர். 

இந்நிலையில், லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு துறை ரீதியான நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகிறது பாண்டி காவல். இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆனாலும், இப்போதுதான் வெளிவந்துள்ளதால், பாண்டி மட்டும் இல்லாது தமிழ்நாட்டிலும், இதுதான் பேச்சாக உள்ளது. அதில் சிலர் லஞ்சம் எப்படி எல்லாம் வசூலிக்கிறார்கள் பாருங்களேன் எனவும் இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க என சிலரும்,  என்னதான் லஞ்சம் வாங்கினாலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என ஒரு சிலரும் கூறிவருகிறனர். 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget