மேலும் அறிய

Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு

Pollachi Case Judgement Tamil: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட, 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Pollachi Case Judgement Tamil: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட, 9 பேருக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி வழக்கு - தண்டனை அறிவிப்பு:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பான வழக்கை கடந்த 6 ஆண்டுகளாக கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதன் முடிவில், குற்றம்சாட்டப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி காலையில் தீர்ப்பளித்தார். அதன்முடிவாக, குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பகிர்ந்தளிக்கப்படும்.

எந்த குற்றவாளிக்கு எத்தனை ஆயுள்?

  • ஏ1 - சபரிராஜன் - 4 ஆயுள் தண்டனை
  • ஏ2 - திருநாவுக்கரசு - 5 ஆயுள் தண்டனை
  • ஏ3 - சதிஷ் - 3 ஆயுள் தண்டனை
  • ஏ4 - வசந்தகுமார் - 2 ஆயுள் தண்டனை
  • ஏ5 - மணிவண்ணன் - 5 ஆயுள் தண்டனை
  • ஏ7 - ஜேரன் பால் - 3 ஆயுள் தண்டனை

ஏ6, ஏ8 மற்றும் ஏ9 என குறிப்பிடப்பட்டுள்ள பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிகபட்ச தண்டனை விதிப்பு:

கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை ஆகிய இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களின் புகாரிகளும், ஒரே வழக்காக விசாரணை செய்யப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளின் கீழ், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக சாகும் வரை ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம். அதில் அதிகபட்ச தண்டனையான சாகும் வரை சிறை என்ற தண்டனையை நீதிபதி அறிவித்துள்ளார். இதுபோக, குற்றவாளிகள் கடந்த 6 ஆண்டுகளாக சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு ஒன்றரை லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ வெற்றிகரமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், குற்றவாளிகள் 9 பேரும் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget