மேலும் அறிய

OTP Fraud: "கார்டு மேலே இருக்க பதினாறு நம்பர் சொல்லு சார்” - 53 லட்சம் திருட்டு: 16 மணிநேரத்தில் அதிரடி காட்டிய சென்னை போலீஸ்

சென்னை வில்லிவாக்கத்தில் ஓய்வுபெற்ற ஓ.என்.ஜி.சி. ஊழியர் வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் திருடப்பட்ட 53 லட்சத்தை சென்னை போலீசார் 16 மணி நேரத்தில் மீட்டனர்.

சென்னை, வில்லிவாக்கத்தில் வசித்து வருபவர் அன்பரசு. சென்னை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஓய்வுபெற்றுள்ள நிலையில் வீட்டிலே இருந்து வருகிறார். இவருக்கு தற்போது வயது 66. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றதன் மூலம் கிடைத்த பணத்தை, வில்லிவாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளார். அவர் கடந்த 37 ஆண்டுகளாக அந்த வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவரது மொபைல் எண்ணுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. ரகசிய எண் வந்துள்ளது என்றும், அதை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


OTP Fraud:

வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று அவர்கள் கூறியதால் அதை நம்பிய அன்பரசும், அவர்களுக்கு தன்னுடைய செல்போன் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். இதையடுத்து, அவரது எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் இருந்த 53 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம் 6 தவணைகளாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது செல்போன் எண்ணுக்கு எந்த குறுஞ்செய்தியும் வராத காரணத்தால் அவரது பணம் பறிபோனது அவருக்கு தெரியவில்லை. பின்னர், அவரது மகனிடம் இந்த தகவலை கூறவும், அவரது மகன் அந்த எண்ணிற்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாகவும், இந்தியிலும் பேசியுள்ளனர்.

பின்னர், அவரது மகன் இணையவழி பரிவர்த்தனையில் அன்பரசுவின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை ஆராய்ந்தபோதுதான் அவர்களது கணக்கில் இருந்த 53 லட்சம் பறிபோனது தெரியவந்துள்ளது. இதனால், அன்பரசு மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ந்து அடைந்துள்ளனர். இதனால், அவர் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு அவரது டெபாசிட் தொகையில் இருந்த பணம் சாதாரண வங்கிக்கணக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அன்பரசின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட 53 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் எஸ்.டி.டி.ஆர். என்ற தனிக் கணக்கிற்கு சென்றுள்ளது. ஆனால், இந்த எஸ்.டி.டி.ஆர். கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு பணத்தை மாற்ற குறைந்தது 4 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.

ஆனால், முன்னதாகவே காவல்துறையில் அன்பரசு புகார் அளித்த காரணத்தால், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 16 மணிநேரத்திற்குள் அன்பரசு இழந்த 53 லட்சம் மீண்டும் அன்பரசுவின் கணக்கிற்கே கொண்டு வரப்பட்டது. மேலும், எஞ்சிய 25 ஆயிரத்தையும் மீட்க வங்கி அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசார் 16 மணிநேரத்திற்குள் 53 லட்சத்தை மீட்டதற்கு உயரதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget